Skip to main content

பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது

🏝 *ஊருக்கு  நடுவிலே  ஒரு பெரிய மரம்  இருந்தது.* 

🌳 *அந்த மரத்திடம் ஏதோ பெரிய சக்தி  இருப்பதாக ஊர்மக்கள் நம்பினர்.* 👨‍👨‍👧‍👦👨‍👨‍👧 *எனவே அதற்குப் பட்டாடை உடுத்தி பலி செலுத்தினர்.*🙏 

*இதையெல்லாம் பார்த்த  ஒரு  கிறிஸ்தவ இளைஞனுக்கு மிகவும்  ஆத்திரம்🤷‍♂ வந்தது.*

😳 *கடவுளுக்குக்  கொடுக்க வேண்டிய  மரியாதையை* 🙇🏻‍♂  *மரத்துக்கு செலுத்தும் மக்களைக் கண்டு மிகவும் வேதனை😟 அடைந்தான்.*

*ஒரு நாள் யாரும் இல்லாத இரவு வேளையில் அந்த மரத்தை வெட்டி🌳⛏ சாய்க்கக் கோடறியுடன் புறப்பட்டான்.* 

*மரத்தை 🌳⛏ வெட்டக் கோடறியை ஓங்கினான்.* *அடுத்த நொடியே பிசாசு👹 அவனுக்கு முன்னால் குதித்து  அவனைத் தடுத்தான்.* 

*இளைஞன் மீண்டும் கோடறியை ஓங்கும்போது பிசாசு அவனைத் தாக்கத் தொடங்கினான்.* 👹

*இளைஞன் பொறுமை இழந்தான்.* ☹

*"இரண்டே அடியில் அவனை வீழ்த்தி விட்டான்."* 👊🤜🏻

*பிசாசு  உடனே  அவன் காலைப் பிடித்துக்  கொண்டு  மரத்தை வெட்ட வேண்டாமென்று கெஞ்சினான்.*👺 

*இளைஞன் மரத்தை வெட்டி சாய்ப்பதிலேயே குறியாக இருந்தான்.*😧 

*இப்போது பிசாசு  ஒரு பெரிய மூட்டையை* 💷💶 *அவனிடம் கொடுத்தான். அது  முழுவதும் பணம்.*🤪

*" இதை நீயே வைத்துக் கொண்டு மரத்தை விட்டு விடு" என்றான்*.👹 

*இளைஞன் யோசித்தான்.*🤔🤔

*" சரி! இப்போதைக்கு விட்டு விடுவோம்.*😆😄😃 *இன்னொரு நாளைக்கு வந்து வெட்டிக் கொள்ளலாம். நமக்கும்  நிறையப்  பணம் கிடைக்கும் "*.💶💷 *என்று எண்ணியபடி மூட்டையை வாங்கிக் கொண்டு  அந்த  இடத்தை விட்டுப்  போனான்.*🚶‍♂

*நாட்கள் ஓடின. பிசாசு கொடுத்த  பணமெல்லாம் தீர்ந்து போனது.  மீண்டும் பணத்தேவை வந்தது*.😨 

*அப்போது அவனுக்கு ஒரு யோசனை* *தோன்றியது.*🤔 
*" மீண்டும் அந்த* *மரத்தை🌳🗡 வெட்ட முயற்சி செய்தால்  பிசாசு👺💶💷 வந்து  பணம்* *கொடுப்பானல்லவா ?"*
*எண்ணம் வந்தவுடனே கோடறியுடன் கிளம்பிவிட்டான்.* 🗡🌳🚶‍♂

*மரத்தை நெருங்கி அதை வெட்ட முயற்சித்தான்.🌳🚶‍♂  மீண்டும் பிசாசு வந்து  அவனைத்  தடுத்தான்*.👺  *இளைஞன் மீண்டும் கோடறியை ஓங்கினான்.*  *பிசாசு முன்பு போலவே  அவனைத் தாக்கினான்.* 
*இளைஞனும் திரும்பத் தாக்கினான்.* 🤜🏻👊

*ஆனால் இம்முறை "பிசாசு அவனை  ஒரே அடியில் வீழ்த்தி விட்டான்."*👊

*இளைஞனுக்கு ஒன்றுமே புரியவில்லை.*😧😨 
*"கடந்தமுறை  தோல்வியடைந்த பிசாசு இன்று எப்படி ஜெயித்தான் ? " என்று குழம்பினான்.*🤔🤔

*இப்போது பிசாசு சொன்னான்,* 👺

*முன்பு  "கடவுளுக்காக" 🙏 வைராக்கியமாய்  என்னுடன்  சண்டையிட்டாய்.  ஜெயித்தாய்.* 💪🏻

*இப்போது "காசுக்காக"  என்னிடம்💶💷 சண்டையிட்டாய். மண்ணைக் கவ்வினாய்".*

*கடவுளுக்காக  ஊழியம் செய்தால் ஜெயம்.*👑 

*காசுக்காக  ஊழியம் செய்தால்  கிடைப்பதோ அவமானம்.*😔

*"பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது."*
*சிலர் அதை இச்சித்து, விசுவாசத்தைவிட்டு வழுவி, அநேக வேதனைகளாலே தங்களை உருவக் குத்திக்கொண்டிருக்கிறார்கள்.*

*1 தீமோத்தேயு 6 :10*

Comments

Popular posts from this blog

Configure DB2 in IBM Rational Application Developer (RAD)

How to Configure DB2 in IBM Rational Application Developer (RAD)? Step: 1 Go to Data Source Explorer Step: 2 Right Click on   Database connection and click New Step: 3 Select   Db2 for Linux, UNIX and Windows from Select a database manager and enter appropriate details in Properties Step: 4 Click on  Test connection Step: 4 Click on  Finish

He Will quiet you with His Love, He will rejoice over you with singing!!!!

red