🏝 *ஊருக்கு நடுவிலே ஒரு பெரிய மரம் இருந்தது.*
🌳 *அந்த மரத்திடம் ஏதோ பெரிய சக்தி இருப்பதாக ஊர்மக்கள் நம்பினர்.* 👨👨👧👦👨👨👧 *எனவே அதற்குப் பட்டாடை உடுத்தி பலி செலுத்தினர்.*🙏
*இதையெல்லாம் பார்த்த ஒரு கிறிஸ்தவ இளைஞனுக்கு மிகவும் ஆத்திரம்🤷♂ வந்தது.*
😳 *கடவுளுக்குக் கொடுக்க வேண்டிய மரியாதையை* 🙇🏻♂ *மரத்துக்கு செலுத்தும் மக்களைக் கண்டு மிகவும் வேதனை😟 அடைந்தான்.*
*ஒரு நாள் யாரும் இல்லாத இரவு வேளையில் அந்த மரத்தை வெட்டி🌳⛏ சாய்க்கக் கோடறியுடன் புறப்பட்டான்.*
*மரத்தை 🌳⛏ வெட்டக் கோடறியை ஓங்கினான்.* *அடுத்த நொடியே பிசாசு👹 அவனுக்கு முன்னால் குதித்து அவனைத் தடுத்தான்.*
*இளைஞன் மீண்டும் கோடறியை ஓங்கும்போது பிசாசு அவனைத் தாக்கத் தொடங்கினான்.* 👹
*இளைஞன் பொறுமை இழந்தான்.* ☹
*"இரண்டே அடியில் அவனை வீழ்த்தி விட்டான்."* 👊🤜🏻
*பிசாசு உடனே அவன் காலைப் பிடித்துக் கொண்டு மரத்தை வெட்ட வேண்டாமென்று கெஞ்சினான்.*👺
*இளைஞன் மரத்தை வெட்டி சாய்ப்பதிலேயே குறியாக இருந்தான்.*😧
*இப்போது பிசாசு ஒரு பெரிய மூட்டையை* 💷💶 *அவனிடம் கொடுத்தான். அது முழுவதும் பணம்.*🤪
*" இதை நீயே வைத்துக் கொண்டு மரத்தை விட்டு விடு" என்றான்*.👹
*இளைஞன் யோசித்தான்.*🤔🤔
*" சரி! இப்போதைக்கு விட்டு விடுவோம்.*😆😄😃 *இன்னொரு நாளைக்கு வந்து வெட்டிக் கொள்ளலாம். நமக்கும் நிறையப் பணம் கிடைக்கும் "*.💶💷 *என்று எண்ணியபடி மூட்டையை வாங்கிக் கொண்டு அந்த இடத்தை விட்டுப் போனான்.*🚶♂
*நாட்கள் ஓடின. பிசாசு கொடுத்த பணமெல்லாம் தீர்ந்து போனது. மீண்டும் பணத்தேவை வந்தது*.😨
*அப்போது அவனுக்கு ஒரு யோசனை* *தோன்றியது.*🤔
*" மீண்டும் அந்த* *மரத்தை🌳🗡 வெட்ட முயற்சி செய்தால் பிசாசு👺💶💷 வந்து பணம்* *கொடுப்பானல்லவா ?"*
*எண்ணம் வந்தவுடனே கோடறியுடன் கிளம்பிவிட்டான்.* 🗡🌳🚶♂
*மரத்தை நெருங்கி அதை வெட்ட முயற்சித்தான்.🌳🚶♂ மீண்டும் பிசாசு வந்து அவனைத் தடுத்தான்*.👺 *இளைஞன் மீண்டும் கோடறியை ஓங்கினான்.* *பிசாசு முன்பு போலவே அவனைத் தாக்கினான்.*
*இளைஞனும் திரும்பத் தாக்கினான்.* 🤜🏻👊
*ஆனால் இம்முறை "பிசாசு அவனை ஒரே அடியில் வீழ்த்தி விட்டான்."*👊
*இளைஞனுக்கு ஒன்றுமே புரியவில்லை.*😧😨
*"கடந்தமுறை தோல்வியடைந்த பிசாசு இன்று எப்படி ஜெயித்தான் ? " என்று குழம்பினான்.*🤔🤔
*இப்போது பிசாசு சொன்னான்,* 👺
*முன்பு "கடவுளுக்காக" 🙏 வைராக்கியமாய் என்னுடன் சண்டையிட்டாய். ஜெயித்தாய்.* 💪🏻
*இப்போது "காசுக்காக" என்னிடம்💶💷 சண்டையிட்டாய். மண்ணைக் கவ்வினாய்".*
*கடவுளுக்காக ஊழியம் செய்தால் ஜெயம்.*👑
*காசுக்காக ஊழியம் செய்தால் கிடைப்பதோ அவமானம்.*😔
*"பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது."*
*சிலர் அதை இச்சித்து, விசுவாசத்தைவிட்டு வழுவி, அநேக வேதனைகளாலே தங்களை உருவக் குத்திக்கொண்டிருக்கிறார்கள்.*
*1 தீமோத்தேயு 6 :10*
🌳 *அந்த மரத்திடம் ஏதோ பெரிய சக்தி இருப்பதாக ஊர்மக்கள் நம்பினர்.* 👨👨👧👦👨👨👧 *எனவே அதற்குப் பட்டாடை உடுத்தி பலி செலுத்தினர்.*🙏
*இதையெல்லாம் பார்த்த ஒரு கிறிஸ்தவ இளைஞனுக்கு மிகவும் ஆத்திரம்🤷♂ வந்தது.*
😳 *கடவுளுக்குக் கொடுக்க வேண்டிய மரியாதையை* 🙇🏻♂ *மரத்துக்கு செலுத்தும் மக்களைக் கண்டு மிகவும் வேதனை😟 அடைந்தான்.*
*ஒரு நாள் யாரும் இல்லாத இரவு வேளையில் அந்த மரத்தை வெட்டி🌳⛏ சாய்க்கக் கோடறியுடன் புறப்பட்டான்.*
*மரத்தை 🌳⛏ வெட்டக் கோடறியை ஓங்கினான்.* *அடுத்த நொடியே பிசாசு👹 அவனுக்கு முன்னால் குதித்து அவனைத் தடுத்தான்.*
*இளைஞன் மீண்டும் கோடறியை ஓங்கும்போது பிசாசு அவனைத் தாக்கத் தொடங்கினான்.* 👹
*இளைஞன் பொறுமை இழந்தான்.* ☹
*"இரண்டே அடியில் அவனை வீழ்த்தி விட்டான்."* 👊🤜🏻
*பிசாசு உடனே அவன் காலைப் பிடித்துக் கொண்டு மரத்தை வெட்ட வேண்டாமென்று கெஞ்சினான்.*👺
*இளைஞன் மரத்தை வெட்டி சாய்ப்பதிலேயே குறியாக இருந்தான்.*😧
*இப்போது பிசாசு ஒரு பெரிய மூட்டையை* 💷💶 *அவனிடம் கொடுத்தான். அது முழுவதும் பணம்.*🤪
*" இதை நீயே வைத்துக் கொண்டு மரத்தை விட்டு விடு" என்றான்*.👹
*இளைஞன் யோசித்தான்.*🤔🤔
*" சரி! இப்போதைக்கு விட்டு விடுவோம்.*😆😄😃 *இன்னொரு நாளைக்கு வந்து வெட்டிக் கொள்ளலாம். நமக்கும் நிறையப் பணம் கிடைக்கும் "*.💶💷 *என்று எண்ணியபடி மூட்டையை வாங்கிக் கொண்டு அந்த இடத்தை விட்டுப் போனான்.*🚶♂
*நாட்கள் ஓடின. பிசாசு கொடுத்த பணமெல்லாம் தீர்ந்து போனது. மீண்டும் பணத்தேவை வந்தது*.😨
*அப்போது அவனுக்கு ஒரு யோசனை* *தோன்றியது.*🤔
*" மீண்டும் அந்த* *மரத்தை🌳🗡 வெட்ட முயற்சி செய்தால் பிசாசு👺💶💷 வந்து பணம்* *கொடுப்பானல்லவா ?"*
*எண்ணம் வந்தவுடனே கோடறியுடன் கிளம்பிவிட்டான்.* 🗡🌳🚶♂
*மரத்தை நெருங்கி அதை வெட்ட முயற்சித்தான்.🌳🚶♂ மீண்டும் பிசாசு வந்து அவனைத் தடுத்தான்*.👺 *இளைஞன் மீண்டும் கோடறியை ஓங்கினான்.* *பிசாசு முன்பு போலவே அவனைத் தாக்கினான்.*
*இளைஞனும் திரும்பத் தாக்கினான்.* 🤜🏻👊
*ஆனால் இம்முறை "பிசாசு அவனை ஒரே அடியில் வீழ்த்தி விட்டான்."*👊
*இளைஞனுக்கு ஒன்றுமே புரியவில்லை.*😧😨
*"கடந்தமுறை தோல்வியடைந்த பிசாசு இன்று எப்படி ஜெயித்தான் ? " என்று குழம்பினான்.*🤔🤔
*இப்போது பிசாசு சொன்னான்,* 👺
*முன்பு "கடவுளுக்காக" 🙏 வைராக்கியமாய் என்னுடன் சண்டையிட்டாய். ஜெயித்தாய்.* 💪🏻
*இப்போது "காசுக்காக" என்னிடம்💶💷 சண்டையிட்டாய். மண்ணைக் கவ்வினாய்".*
*கடவுளுக்காக ஊழியம் செய்தால் ஜெயம்.*👑
*காசுக்காக ஊழியம் செய்தால் கிடைப்பதோ அவமானம்.*😔
*"பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது."*
*சிலர் அதை இச்சித்து, விசுவாசத்தைவிட்டு வழுவி, அநேக வேதனைகளாலே தங்களை உருவக் குத்திக்கொண்டிருக்கிறார்கள்.*
*1 தீமோத்தேயு 6 :10*
Comments
Post a Comment