Skip to main content

மூன்று குணாதிசயங்கள்


*'' மூன்று குணாதிசயங்கள்''..*

*:-*:-*:-*:-*:-*:-*:-*:-*:-*:-*:-*:-*:-*:-*:-

தோல்வியில் துவண்டு விடாதீர்கள், தன்னம்பிக்கை இழந்து விடாதீர்கள், முயற்சியை நிறுத்தி விடாதீர்கள் என்று எல்லாம் பலர் அறிவுரை சொல்லக் கேட்டு இருக்கிறோம்.

ஆனால் வெற்றி பெற்றவர்களுக்கு யாரும் அதிகம் அறிவுரை சொல்வது இல்லை.

காரணம் வெற்றி பெற்றவர்கள் அறிவு மிக்கவர்கள்,
நல்ல உழைப்பாளிகள், எல்லாம் தெரிந்தவர்கள் என்று பலர் மனதிலும் இருப்பதுதான்.

அதெல்லாம் மற்றவர்கள் மனதில் இருந்தால் பரவாயில்லை.

வெற்றி பெற்றவர்கள் மனதிலேயே கைக்கொள்ளுதல் அல்லாத அந்த எண்ணம் உறுதியாகத் தோன்றும்போது அது எதிர்கால ஆபத்திற்கு அடிக்கல் போடுகிறது.

வெற்றி எப்பேர்ப்பட்டவரையும் ஏமாற்ற வல்லது
.
அது முக்கியமாக மூன்று குணாதிசயங்களை வெற்றியாளர்களிடம் ஏற்படுத்த வல்லது..

*''கர்வம்..*
.................

வெற்றி ஒருவரிடம் “என்னை மிஞ்ச ஆளில்லை” என்ற தேவனை மறந்த  கர்வத்தை ஏற்படுத்தலாம். நான் என்ற கர்வமே வீழ்ச்சிக்கு வழி வகுக்கும்..

*''அலட்சியம்.''*
..........................

வெற்றி அலட்சியத்தையும் உண்டு பண்ணக் கூடியது. அதுவும் தொடர்ந்து சில வெற்றிகள் கிடைத்து விட்டால் ; நியாயங்களை மறந்து தங்களை ஒரு அபூர்வ மனிதராக ஒருவர் நினைத்துக் கொள்ள வாய்ப்பு அதிகம்.

*''எந்த அறிவுரையும் கேளாமை.''*
.............................................

வெற்றி பெற்றவர்களுக்கு கட்டளைகளையும்  யாருடைய அறிவுரையும் தேவை இல்லை என்ற எண்ணம் மேலோங்கி நிற்க வாய்ப்பு உண்டு.

 எல்லாம் எனக்குத் தெரியும், தெரியாமலா இத்தனை வெற்றிகள் கண்டிருக்கிறேன் என்று நினைக்கிற சில வெற்றியாளர்கள், அறிவுரை கூற வருபவர்களை ஏளனமாகப் பார்க்க முற்படுகிறார்கள். அவர்களுக்கு அறிவுரை வேம்பாகக் கசக்கிறது.

ஆம்.,நண்பர்களே..,

தோல்வி அடையும் காலத்தைவிட அதிகமாய் வெற்றி அடையும் நேரத்தில் எச்சரிக்கையாக இருங்கள்.

தோல்வி அடையும் போது இருப்பதை விட அதிகமாய் வெற்றி அடைகையில் கர்த்தரை மறவாதபடி  அடக்கமாய் இருங்கள்.

கர்வமும், அலட்சியமும், அடுத்தவர்களைத் துச்சமாய் நினைக்கும் தன்மையும் உங்களை அண்ட விடாதிருக்க தேவ கட்டளைகளை கைக்கொள்ளுங்கள்

இப்படி கவனமாய் இருந்தால் மட்டுமே வெற்றியை நீங்கள் தக்க வைத்துக் கொள்ள முடியும்.

வாழ்க்கையில் தொடர்ந்து முன்னேறுவது இப்படி இருக்கும் போது மட்டுமே சாத்தியமாகும்.
___________________________/

 *உன் தேவனாகிய கர்த்தரை மறவாதபடிக்கும், நான் இன்று உனக்கு விதிக்கிற அவருடைய கற்பனைகளையும் நியாங்களையும் கட்டளைகளையும் கைக்கொள்ளாமற் போகாதபடிக்கும் எச்சரிக்கையாயிரு.*

*📖உபாகமம் 08 : 11*

🍒🙏🍒

Comments

Popular posts from this blog

Configure DB2 in IBM Rational Application Developer (RAD)

How to Configure DB2 in IBM Rational Application Developer (RAD)? Step: 1 Go to Data Source Explorer Step: 2 Right Click on   Database connection and click New Step: 3 Select   Db2 for Linux, UNIX and Windows from Select a database manager and enter appropriate details in Properties Step: 4 Click on  Test connection Step: 4 Click on  Finish

அன்னை தெராசாவைப் பற்றி கிரிக்கெட் வீரர் சித்து பகிர்ந்துக்கொண்ட சாட்சியை வாசியுங்கள்.

1991-92ம் வருடங்களில், ஒரு டெஸ்ட் மேட்ச் விளையாடுவதற்கு ஊதியமாக எங்களுக்கு ரூபாய் 10,000 வழங்கப்படுவது வழக்கம். ஒருமுறை கல்கத்தாவில் நடந்த ஒரு போட்டியின்போது அப்படி எனக்குக் கிடைத்த பணத்தை எடுத்துக்கொண்டு, அன்னை தெரசாவைக் கட்டாயம் சந்திக்கவேண்டும்.. அவர் செய்துவரும் தன்னலமற்ற சேவைக்காக அவருக்கு இந்தப் பணத்தைக் கொடுத்தேயாகவேண்டும்” என்று எனக்குள் ஓர் உந்துதல் ஏற்பட்டு, அவ்வாறே அவரது ஆசிரமத்துக்குச் சென்றேன். “Sisters of Charity” என்ற அந்த அலுவலகம் மிகச்சிறியதாய் இருந்தது. அங்கே இருந்த கன்னியாஸ்திரிகளிடம் ‘Where is Mother?’ என்று கேட்டேன். அதற்கு அங்கே இருந்த ஒரு கன்னியாஸ்திரி, ‘Mother is at the ‘Home for the dying’ என்றார். எனக்கு ‘Home for the dying’ என்று அவர் கூறியதன் பொருள் விளங்கவில்லை. அவர்கள் என்னை அந்த அலுவலகத்தின் பின்புறம் இருந்த ஒரு கட்டிடத்துக்கு அழைத்துச் சென்றனர். அந்தக் கட்டிடத்தினுள் தங்களது வாழ்வின் கடைசி மணித்துளிகளை எண்ணிக்கொண்டிருக்கும், மரணப்படுக்கையில் இருக்கும் நோயாளிகள் தங்கவைக்கப்பட்டிருந்தனர். நான் உள்ளே நுழைந்தபோது அந்த கட்டிடத்தினுள்ளிருந்து ஒரு சகிக்க இ...

red