Skip to main content

சரீரத்தின் நியதியும் நம் சுயமும்...

சரீரத்தின் நியதியும் நம் சுயமும்...

  தேவனால் உருவாக்கப்பட்ட இந்த மனித சரீரமானது தனக்கு உண்டான நியமத்தின் படியே, நாம் உண்ணும் உணவில் உடலுக்கு வளர்ச்சியை தரக்கூடிய  தேவையான சத்துக்களை தவிர தேவையற்றவைகளை கழிவாக அடுத்த 24 மணி நேரத்திற்குள் வெளியேற்றிவிடுகிறது. அப்படி இல்லையென்றால் நம் சரீரத்தில் உள்ள மற்ற எல்லா அவையவங்களோட வளர்ச்சிக்கே அது பெரும் பாதிப்பை எற்படுத்திவிடக்கூடும். *(நாம் வெளியேற்ற முடியாது என்றாலும் சரீரம் அனுமதிக்காது)*

    நாம் ஒவ்வோருமுறை குடிக்கும் நீரையும்  அதன்படியே தேவையான சத்துக்களை மட்டும் சரீரத்தில் சேர்த்துக்கொண்டு, கொஞ்சம் கொஞ்சமாக சேர்கின்ற சேர்ந்திருக்கின்ற கழிவுகளை, தேவையற்றவைகளை குறைந்தது ஒரு 4 மணி நேரத்திற்கு ஒர முறை சிறுநீரகமாக வெளியேற்றிவிடுகிறது, இல்லை என்றால் அது உடலுக்கு ஆபத்தை ஏற்படுத்தும். *(நாம் வெளியேற்ற முடியாது என்றாலும் சரீரம் அனுமதிக்காது)*

   நாம் ஒவ்வொரு வினாடியும் சுவாசிக்கும் காற்றிலும் சரீரத்திற்கு தேவையான  ஆக்ஸிஜனை தவிர காற்றில் உள்ள மற்ற கலப்புகளை அடுத்த வினாடியே, உடனடியாக வெளியேற்றுகிறது, காரணம், அப்படி  வெளியேற்றவில்லை என்றால் அது நம் உயிருக்கே ஆபத்தாகி விடும்.  *(நாம் வெளியேற்ற முடியாது என்றாலும் சரீரம் அனுமதிக்காது)*

இப்படி இவைகளில் ஒன்றையும் நாமாக நம் சரீரத்திற்காக எதையும் பாா்த்து பாா்த்து செய்வதில்லை இந்த வேலைகள் நாம் பிறந்தது முதல் இதோ நீங்கள் படிக்கும் இந்த நிமிடம் வரையும் இனியும் அது தானாகவே இயல்பாகவே தேவன் படைத்தவிதமாக தன்னுடைய நியதியை மீறி செயல்படுவதில்லை,  காரணம், அவயவங்களுக்கு தெரியும் ஒன்றிற்க்கு ஒன்று முரண்பட்டால் முழு சரீரமே பாதிப்புக்குள்ளாகும் அதனால் சரீர மரணம் ஏற்படும்  என்று.

  அதுலாம் சரிப்பா இத எதுக்கு இப்ப சொல்ற அப்படின்னு கேட்கிறீர்களா?

கொஞ்சம் சிந்திச்சுப்பாா்ப்போம்,
நாம் ஒவ்வோருவரும் நன்மை தீமை என்ன என்று அறிந்த நாளில் இருந்து இந்த நிமிடம் வரைக்கும் நம் மனதில், நினைவில் அன்பையும், இரக்கத்தையும், அரவணைப்பும், உதவுவதும், பொருமை, சாந்தம், தாழ்மை இப்படி நன்மையானவைகளையே சேர்த்து வைக்க வேண்டிய இடத்தில் அதற்கு மாறாக,

கோபம், பொறாமை, வெறுப்பு, பழிசொல்வது, வஞ்சம், போட்டி, இச்சை, தரக்குறைவாக எண்ணுவது, பொல்லாத ஆசைகள், பொய், ஏமாற்று, திருட்டு, பணஆசை, பெருமை,  அவமதிப்பு, மற்றவரை அடிமைப்படுத்துவது இப்படி இன்னும் எத்தனையோ நம் வாழ்வை அழிக்க கூடிய இந்த அசுத்தங்களை ஒரு வேளை நமக்குள் நாம் அறியாமலோ , அறிந்தோ சேர்த்து வைத்திருப்போமானால் அது எப்பேற்பட்ட அழிவை நமக்கு ஏற்படுத்தும், கொஞ்சம் யோசிங்க,  எனவே அவைகளை வெளியேற்றுவோம் ஆனால் அது  இப்பொழுதே இந்த நிமிஷமேலாம் அனைத்தையும் நம்மை விட்டு வெளியேற்றிவிட முடியாது காரணம், எத்தனை ஆண்டுகளாக சேர்த்து வைத்ததல்லவா... ஆனால் அவைகளை முற்றிலுமாக நம்மை விட்டு நீக்க முடியும்...
அடுத்த பதிவில்..

இல்லையென்றால் அவைகள் நம்மை மரணத்திற்கு வழிவகுக்கும்.

எப்படி வெளியேற்றுவது என தெரியலையா? இதோ...

  மேலே சொல்லப்பட்ட இவையெல்லாம் வெளியேற்ற ஒரே வழி நாம் தேவ வார்த்தையோடு இணையவேண்டும், எப்படி சாத்தியம், இதோ..
ஒரு கண்ணாடி குவளையில் மிகவும் ஆபத்தான திரவ அமிலத்தை நிரப்புங்கள்.
விரல் வைத்தால் நொடியில் அரித்துவிடுமளவிற்கு அவ்வளவு வீரியம் நிறைந்ததாக இருக்கட்டும்.

  இந்த அமிலம்தான் நம்மில் உள்ள பாவங்களை சுட்டிக்காண்பிக்கிறது. எனவே எப்படி இந்த அமிலம் ஒர பொருளை கொஞ்சம் கொஞ்சமாக அரித்து பிறகு அந்தப் பொருள் அந்த அமிலத்திற்குள்ளேயே மூழ்கி கரைந்து கலந்து மறைகிறதோ, அதே போல்தான் நமக்குள் உள்ள பாவமும் கொஞ்சம் கொஞ்சமாக அரித்து நம்மை அதனுல் மூழ்க வைத்து பாவத்திலேயே மரிக்கப் பண்ணுகிறது.

இப்பொழுது நாம் அந்த குவளையில் உள்ள ஆபத்தான இந்த திரவத்தை வெளியேற்றனும் ஆனால் அந்த குவளையை தொடாமல் ?
அது முடிந்தால் நம்மை விட்டு பாவத்தையும் நீக்கி விட முடியும்.

  குவளையை தொடாமல் அமிலத்தை நீக்குவது எப்படி? வெகு எளிது,  முயற்சித்தான் தேவை...

*ஜீவ தண்ணீர் நானே*

நாம் பருகும் நீரை அந்த அமிலம் உள்ள  குவளையில் ஊற்றிக்கொண்டே இருப்போம் குவளை நிரம்பி வழியும், சரி...
இப்பொழுதும் அந்த குவளைக்குள் இருக்கும் திரவத்தின் பெயா் அமிலம்தான் ஆனால் அதன் வீரியம் முன்பிருந்தது போல இருக்காது, வீரியம் குறைந்திருக்கும்.

  எனவே இன்னும் தண்ணீரை அதன்மேல் ஊற்றிக் கொண்டே இருப்போமே, ஆஹா! என்ன ஆச்சா்யம், அந்த அமிலமானது தன்னுடைய முழு வீரியத்தையும் இழந்து தண்ணீரோடு தண்ணீராக மாறி அதன் அரிக்க்கூடிய அந்த  அமிலத்தன்மையையே  இழந்து விட்டதே, இனி இதனால் எந்த ஆபத்தும் இல்லை..

புரிந்துக்கொண்டிருப்பீர்கள் என நினைக்கிறேன்..

  இப்படி தான் நாமும் தேவனுடைய வார்த்தைகளை படிக்கும் போது அந்த வாா்த்தைகள் ஒவ்வொன்றாக நமக்குள் சென்று சேர்ந்து சேர்ந்து நம் இருதயம் தேவ வாா்த்தையால் நிரம்ப நிரம்ப உள்ளே எவ்வளவு ஆழத்தில் இருளில் உள்ள பாவமானாலும் சரி, அது தேவ வாா்த்தையின் வெளிச்சம் நிரம்ப நிரம்ப சில நாட்களுக்குப் பிறகு அவைகள் நம் இருதயத்தை விட்டே வெளியேறியிருக்கும். பிறகு வெளிச்சத்தால் நம் இருதயம் நிரம்பி இருக்கும் போது இருளுக்கு இடம் ஏது..

*அவரில் எவ்வளவேனும் இருள் இல்லை*
எனவே இன்றே தேவனுடைய வாா்த்தைகளை வாசிக்க ஆரம்பிப்போமா...🙏🏽

Comments

Popular posts from this blog

Configure DB2 in IBM Rational Application Developer (RAD)

How to Configure DB2 in IBM Rational Application Developer (RAD)? Step: 1 Go to Data Source Explorer Step: 2 Right Click on   Database connection and click New Step: 3 Select   Db2 for Linux, UNIX and Windows from Select a database manager and enter appropriate details in Properties Step: 4 Click on  Test connection Step: 4 Click on  Finish

அன்னை தெராசாவைப் பற்றி கிரிக்கெட் வீரர் சித்து பகிர்ந்துக்கொண்ட சாட்சியை வாசியுங்கள்.

1991-92ம் வருடங்களில், ஒரு டெஸ்ட் மேட்ச் விளையாடுவதற்கு ஊதியமாக எங்களுக்கு ரூபாய் 10,000 வழங்கப்படுவது வழக்கம். ஒருமுறை கல்கத்தாவில் நடந்த ஒரு போட்டியின்போது அப்படி எனக்குக் கிடைத்த பணத்தை எடுத்துக்கொண்டு, அன்னை தெரசாவைக் கட்டாயம் சந்திக்கவேண்டும்.. அவர் செய்துவரும் தன்னலமற்ற சேவைக்காக அவருக்கு இந்தப் பணத்தைக் கொடுத்தேயாகவேண்டும்” என்று எனக்குள் ஓர் உந்துதல் ஏற்பட்டு, அவ்வாறே அவரது ஆசிரமத்துக்குச் சென்றேன். “Sisters of Charity” என்ற அந்த அலுவலகம் மிகச்சிறியதாய் இருந்தது. அங்கே இருந்த கன்னியாஸ்திரிகளிடம் ‘Where is Mother?’ என்று கேட்டேன். அதற்கு அங்கே இருந்த ஒரு கன்னியாஸ்திரி, ‘Mother is at the ‘Home for the dying’ என்றார். எனக்கு ‘Home for the dying’ என்று அவர் கூறியதன் பொருள் விளங்கவில்லை. அவர்கள் என்னை அந்த அலுவலகத்தின் பின்புறம் இருந்த ஒரு கட்டிடத்துக்கு அழைத்துச் சென்றனர். அந்தக் கட்டிடத்தினுள் தங்களது வாழ்வின் கடைசி மணித்துளிகளை எண்ணிக்கொண்டிருக்கும், மரணப்படுக்கையில் இருக்கும் நோயாளிகள் தங்கவைக்கப்பட்டிருந்தனர். நான் உள்ளே நுழைந்தபோது அந்த கட்டிடத்தினுள்ளிருந்து ஒரு சகிக்க இ...

red