Skip to main content

வளர்ச்சியும், முதிர்ச்சியும்



*“வளர்ச்சியும், முதிர்ச்சியும்”.*

ஐந்து நிமிடங்களில் பத்து வினாக்களுக்கு
பதில் எழுத முடியுமா???

ஒரு நிறுவனம் வேலைக்கு ஆட்கள் தேவை என்று அறிவித்தது அதன்படி நிறைய நபர்கள் நேர்காணலுக்கு வந்திருந்தார்கள் அனைவரையும் ஒரு அரங்கத்தில் உட்கார வைத்தார்கள் அனைவரிடமும் வினாத்தாள்களும், விடைத்தாளும் வழங்கப்பட்டது.

இப்பொழுது அந்த நிறுவன மேலாளர் பேசினார்.. இந்த வினாத்தாளில் பத்து கேள்விகள் உள்ளது. உங்களுக்கு ஐந்து நிமிட நேரம் ஒதுக்கப்படும்

அதற்குள் இந்த வினாக்களுக்கு நீங்கள் பதிலளிக்க வேண்டும். தகுதியுடைய நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு வேலை வழங்கப்படும் என்றார்.

ஐந்து நிமிட நேரம் ஆரம்பமானது.. நேரம் குறைவாக உள்ளது என்று அனைவரும் வேகமாக பதில் எழுதினர். நேரம் முடிந்த பின் அனைவரிடமும் விடைத்தாளை வாங்கினார் மேலாளர்..

அதன்பின், அந்த நிறுவன மேலாளர் சொன்னார். விடைத்தாளில் பதில் எழுதாத இவர்கள் இருவர் மட்டும் இந்த நிறுவனத்தில் வேலை செய்ய தகுதியானவர்கள். மற்றவர்கள் வீட்டிற்கு செல்லலாம் என்றார்.

அனைவருக்கும் ஒரே ஆச்சரியம், அனைவரும் ஒரு சேர அந்த நிறுவன மேலாளரிடம் கேட்டனர். வினாக்களுக்கு சரியான பதிலளித்த எங்களுக்கு வேலை இல்லை என்கிறீர்கள்.

எந்த வினாக்களுக்கும் பதில் அளிக்காத அந்த இருவருக்கு மட்டும் எப்படி வேலை கொடுத்தீர்கள் என்றனர்.

இந்த இடத்தில் நமக்குள் தோன்றும் கேள்வியும் இதுதான். பதில் அளித்தவர்கள் இருக்க, பதில் அளிக்காதவர்களுக்கு வேலையா?

அதற்கு அந்த மேலாளர் சொன்னார், எல்லோரும் அந்த பத்தாவது கேள்வியை படித்துப் பாருங்கள் என்றார்.. படித்துப் பார்த்த அனைவரும் பதிலேதும் பேச முடியாமல் வீட்டிற்கு சென்றனர். அந்த பத்தாவது கேள்வி இதுதான்..!

10) மேற்கண்ட எந்த வினாக்களுக்கும் நீங்கள் பதில் அளிக்க வேண்டாம்.? என்பதாகும்.

இது சிரிக்க வேண்டிய விஷயம் அல்ல. நாம் அனைவரும் சிந்திக்க வேண்டிய விஷயம், இரண்டு நிமிடம் நேரம் ஒதுக்கி வினாத்தாள் முழுவதையும் படித்திருந்தால் வேலை நிச்சயம் கிடைத்திருக்கும் அல்லவா? Yes !

இந்த நவீன யுகத்தில் பிள்ளைகளை படி படி என்று படிக்கச் சொல்லி நிறைய மதிப்பெண்கள் வாங்க வேண்டும் என்று நினைக்கிறோமே தவிர, நம் பிள்ளைகள் நல்ல புத்திசாலியாக வளர வேண்டும் என்று யாருமே நினைப்பதில்லை..!

பல நிலைகளில் இப்படித்தான் ஏமாறுகிறோம். பொறுமையாளர்கள் கூட புறக்கணிக்கப்படுகிறார்கள்.

என்அன்பு வாசகரே ,
எல்லா விஷயங்களிலும் ஆசீர்வாதங்களையும் பலனையும் நீங்கள்  பெற்றுக் கொள்ள பொறுமை தேவையாயிருக்கிறது.

பைபிள் சொல்கிறது.
மிகுந்த பலனுக்கேதுவான உங்கள் தைரியத்தை விட்டுவிடாதிருங்கள்நீங்கள் தேவனுடைய சித்தத்தின்படி செய்து, வாக்குத்தத்தம் பண்ணப்பட்டதைப் பெறும்படிக்குப் பொறுமை உங்களுக்கு வேண்டியதாயிருக்கிறது.  எபிரேயர் 10:35-36

ஒவ்வொரு நிமிஷமும் விலையேறப்பெற்ற தாயிருக்கிறது. விசுவாசத்தின் பரீட்சையானது பொறுமையை உண்டாக்குகிறது.  பொறுமை உங்களுக்கு வளர்ச்சியையும், முதிர்ச்சியையும் தருகிறது.

உங்கள் விசுவாசத்தின் பரீட்சையானது பொறுமையை உண்டாக்குமென்று அறிந்து, அதை மிகுந்த சந்தோஷமாக எண்ணுங்கள்.
நீங்கள் ஒன்றிலும் குறைவுள்ளவர்களாயிராமல், பூரணராயும் நிறைவுள்ளவர்களாயும் இருக்கும்படி, பொறுமையானது பூரண கிரியை செய்யக்கடவது.

*• (யாக்கோபு 1:3,4).*

எதை செய்தாலும் பொறுமையோடும்,
ஞானத்தோடும். செய்யுங்கள். !!
நீங்கள் பலனை பெறுவீர்கள்.

அனைவருக்கும்
அன்புடன் இனிய காலை வணக்கம் !!
இந்த நாள் உங்களுக்கு நல்ல நாளாய்
அமைவதாக!!!

🙏🏻🎀🙏🏻

Comments

Popular posts from this blog

Configure DB2 in IBM Rational Application Developer (RAD)

How to Configure DB2 in IBM Rational Application Developer (RAD)? Step: 1 Go to Data Source Explorer Step: 2 Right Click on   Database connection and click New Step: 3 Select   Db2 for Linux, UNIX and Windows from Select a database manager and enter appropriate details in Properties Step: 4 Click on  Test connection Step: 4 Click on  Finish

He Will quiet you with His Love, He will rejoice over you with singing!!!!

red