Skip to main content

தன் பாவங்களை மறைக்கிறவன் #வாழ்வடையமாட்டான்.

#சிந்தனைக்கு...🤔😴

அமெரிக்காவில்  ஒரு இளைஞனுக்கு👨  கொலை குற்றத்திற்காக நீதிபதி  தூக்குத் #தண்டனையை  கொடுத்தார்.
ஒரு  குறிப்பிட்ட  நாளில் இவனை தூக்கில்  போடவேண்டும் என்று  நாளையும்  குறித்திருந்தார்.

இதனை  அறிந்த  ஊர் மக்கள் அந்த  மாகாணத்தின்  ஆளுநருக்கு  கடிதம் #எழுதினார்கள்.🖊️🖋️✒️📝
சந்தர்ப்ப  சூழ்நிலையினால்  அவன் இந்த  கொலையை செய்ததாகவும்  தெரிவித்தனர்.  மேலும்  அவன் தாய்க்கு  ஒரே  மகன்  என்பதால்
அவனுக்கு  #சிறிய  அளவில்  தண்டனை  கொடுக்க வேண்டும்  எனவும்  கேட்டுக் கொ‌ண்டன‌ர்.

ஆனால்
ஆளுநர்  இந்த  மனுவை  #நிராகரித்தார்.

பல கடிதங்கள்📝  எழுதினார்கள். ✍️ அவன் தாய்  எழுதினார் .
எல்லா  மனுக்களையும்  ஆளுநர்  #நிராகரித்தார் .

தூக்கில் போடுவதற்க்கு
ஒரு நாள்  முன்பு
ஒரு  போதகர் அவனை பார்க்க சென்றார்.
அவனிடம் அவர் தம்பி நாளையுடன்  உன் உலக வாழ்வு  முடிவு பெறுகிறது . இப்போதும்
உனக்கு  நல்ல  #வாய்ப்பு  இருக்கிறது.  நீ செய்த  பாவத்திற்காக  இயேசுவிடம் ☦️ #மன்னிப்பு  கேள் அவர் மன்னிக்க  தயையுள்ளவராய்  இருக்கிறார்.
உன் பாவத்தை  #அறிக்கை  இடு🗣️ என்றார்.

ஆனால்
அவனோ  நான்  எதற்காக பாவ மன்னிப்பு  கேட்க வேண்டும்.
இன்று  மட்டும்  தான்  உயிருடன்  இருக்க  போகிறேன் .
என் ஊர்  மக்கள்  மற்றும்  என் தாய் எவ்வளவோ மனுக்களை  ஆளுநருக்கு  அனுப்பினார்கள்.

எந்த  பயனும் இல்லை.
நாளை நான்  #சாகபோகிறேன் நான் எதற்காகவும்  பாவ மன்னிப்பு  கேட்க மாட்டேன்  என்றான்

உடனே  போதகர்  அவனிடம்
ஆளுநர்  #கைவிட்டாலும்  இயேசு  #கைவிடமாட்டார்  இப்போது நீ பாவ மன்னிப்பு  எடுத்தால்  நாளை உனக்கு  கிடைக்க  இருக்கும்  தூக்குத் #தண்டனையை  கூட நிறுத்த முடியும்  என்றார்

அவனோ போதகரை  பார்த்து  சிரித்து  விட்டு
இத்தனை நாட்களும்  விடுவிக்காதவரா இனிமே  விடுவிக்க  போகிறார்
என்று  கூறி  போதகரை #துரத்தினான்.

துக்க முகத்துடன்  போதகர் திரும்பி சென்றனர்.

இதை கவனித்து  கொண்டிருந்த
சிறை காவலர்கள்  அவனிடம்  ஓடி🏃 வந்து நல்ல ஒரு வாய்ப்பை தவறவிட்டாயே வந்தது யார் தெரியுமா...???

இந்த மாகாணத்தின் கவர்னர்🎩 அவர்.
உன்னை விடுவிக்க போதகர்  வேடமிட்டு வந்தார்.

ஆனால்  நீயோ அவரை உதாசினப்படுத்தி விட்டாய் என்றார்கள்.

அடுத்த நாள் காலை  வந்தது
தூக்கு கயிற்றின் முன்பு  அவனை நிறுத்தினார்கள் . அவன் பேசினான்🗣️

"நான் செய்த  பாவத்துக்காக நான்  சாகவில்லை...???
பாவ மன்னிப்பை #உதாசீன படுத்தியதற்காகவே சாகிறான் என்றான்"...!!!

ஆம் பாவம் செய்யாத மனிதன் யாருமே இல்லை.
செய்த பாவத்தை  #மறைக்காமல் இயேசுவிடம்  மன்னிப்பு கேட்போம் .
அவர் மன்னிக்க #தயையுள்ளவராய் இருக்கிறார்.

#நீதிமொழிகள் :28:14

தான் பாவங்களை  மறைக்கிறவன் #வாழ்வடையமாட்டான். அதை அறிக்கை  செய்து  விட்டு  விடுகிறவனோ  #இரக்கம்  பெறுவான்.

பாவ மன்னிப்பு  கேட்போமா. ......????

Comments