Skip to main content

Posts

Showing posts from February, 2020

முதல் பெண் இரத்த சாட்சி நாகம்மாள்

“...என்னைப் பற்றும் விசுவாசத்தை நீ மறுதலியாமலிருந்ததையும் அறிந்திருக்கிறேன்.” – வெளி. 2:13 நம் தமிழ்நாட்டில் கிறிஸ்தவ மாவட்டம் என்றவுடன் நம் நினைவிற்கு வருவது திருநெல்வேலிதான். அப்பகுதியின் முதல் பெண் இரத்த சாட்சி நாகம்மாள் ஆவார். 18ம் நூற்றாண்டிலிருந்தே அப்பகுதியில் நற்செய்தி பரவ ஆரம்பித்தது. கிழக்கிந்திய வர்த்தகக் குழுவின் குருவான ஜேம்ஸ் ஹாப் அவர்கள் பாளையங்கோட்டையில் தங்கி ஊழியம் செய்ய ஆரம்பித்தார். ஸ்ரீவைகுண்டத்தின் அருகிலுள்ள திருபுளியங்குடி (TPகுடி) யிலுள்ள நம்பி என்ற விவசாயியின் மூன்று பிள்ளைகளில் இளையவன் சுப்பிரமணி வேலை நிமித்தமாக ஸ்ரீவை போகும்போது தெருப்பிரசங்கம் செய்து கொண்டிருந்தார் ஒரு உபதேசியார். பிரசங்கம் முழுவதையும் கேட்டு விட்டு ஒரு நற்செய்தி நூலையும் வாங்கிக் கொண்டான். வீட்டிற்கு வந்து தாயாரிடம் நாம் வணங்கும் தெய்வமெல்லாம் நம்மிடம் "அது, இது" என கேட்கிறது.  ஆனால் இந்த தெய்வமோ உயிரையே நமக்காக கொடுத்திருக்கிறார். "சொர்க்கம் செல்ல ஒரே வழி இயேசுகிறிஸ்துதானாம்" என்றான். நேரம் கிடைக்கும்பொழுதெல்லாம் கையிலுள்ள யோவான் சுவிசேஷத்தை வாசித்து வீட்டிலுள்ளவர

ரோஸ்ஆலன்

“பகைஞனையும் பழிகாரனையும் அடக்கிப்போட, ...பாலகர் வாயினால் பெலன் உண்டு பண்ணினீர்.” – சங்கீதம் 8:2 மேரி இராணி இங்கிலாந்தை அரசாண்ட காலத்தில் கோல்ஸ்டர் என்ற இடத்தில் ரோஸ்ஆலன் வாழ்ந்து வந்தாள். அவள் பெற்றோரும் அவளும் இயேசுவை இரட்சகராக ஏற்றுக் கொண்டவர்கள்.  இப்படிப்பட்டவர்களை சிறையில் அடைத்து அவர்களுக்கு மரணதண்டனை வழங்கி வந்தார் மேரி இராணி. ஆனால் ரோஸ் ஆலனின் குடும்பத்தினர் ஆண்டவருக்காக துணிவுடன் வாழ்ந்தனர். ஒரு நாள் அவள் பெற்றோர் ஜெபக் கூட்டத்திற்குச் சென்று வந்த போது அவர்களை கவனித்து விட்ட பேலிட் தன் ஆட்களுடன் நள்ளிரவு 2 மணிக்கு சிறைக்கு அழைத்துச் செல்ல வந்தார். அப்போது தன் தாய்க்கு தண்ணீர் மொள்ள வந்த ரோஸ் ஆலனிடம் பேலிட் "சிறுபெண்ணே எப்படியாகிலும் உன்னுடைய பெற்றோர் இயேசுவை மறுதலிக்கும்படி செய்" என்றான். அதற்கு அவள் "என்னைக் காட்டிலும் பரிசுத்த ஆவியானவர் அவர்களை சரியாய் நடத்துவார்" என்றாள். உடனே அவன் கோபங்கொண்டவனாய் "நீயும் அந்தக் கூட்டத்தைச் சார்ந்தவளா? உன் பெற்றோருடன் நீயும் மரிக்க விரும்புகிறாயா?" என்றான். அவள் "தேவன் என்னை அதற்கென்று அழைப்பாரானால் அத

க்ளாரிந்தா - தமிழக கிறிஸ்தவம்

தமிழக கிறிஸ்தவம்... பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்து...... அவரது தாய் இயக்கமான RSS  ஆதரவாளர்களின் கூக்குரல் பெரிதாய் ஒலித்துக்கொண்டிருக்கிறது.. அவர்கள் மட்டும்தான் இந்தியர்கள் என்பது போலவும், கிறிஸ்தவர்களும் இஸ்லாமியர்களும் ஏதோ வெளிநாட்டிலிருந்து வந்தது போலவும்.. அவர்களுக்கு மட்டும்தான் இந்த தேசமும் தேசபக்தியும் சொந்தம் என்பது போலவும்..! இந்தியாவில் உள்ள கிறிஸ்தவர்கள் எல்லோரும் பணத்திற்காக மதம் மாறியவர்கள் என்றும், இப்பொழுதும் பணம் கொடுத்துதான் மதம் மாறிக் கொண்டிருப்பதாகவும் ஒரு மாயக் குரல் உலா வந்து கொண்டிருக்கிறது. பணம் கொடுத்து, ஒருவனை மதம் மாற்றிவிட முடியும் என்றால், இப்பொழுது உங்கள் கையில்தானே அதிகாரம் இருக்கிறது..இந்தியாவின் கஜானாவே உங்கள் கையில்தானே இருக்கிறது. உங்களிடம்தானே, ஒரு வேளை உடுத்தும் ஒரு ஆடைக்கு 10 இலட்ச ரூபாய் செலவளிக்கும் வகையில் தகுதியுள்ள தொழிலதிபர்கள் நண்பர்களாக இருக்கின்றார்கள்? பிறகு என்ன தயக்கம்? இருக்கும் பணத்தை அள்ளி வீசி, இந்தியாவில் உள்ள எல்லா கிறிஸ்தவர்களையும், இஸ்லாமியர்களையும் மதம் மாற்றிவிட வேண்டியதுதானே? யார் உங்களைத் தடை செய்

வில்லியம் டிண்டேல்

“என் வேதத்தின் மகத்துவங்களை அவர்களுக்கு எழுதிக்கொடுத்தேன்; அவைகளை அந்நியகாரியமாக எண்ணினார்கள்.” – ஓசியா 8:12 இன்று நம்முடைய இல்லங்களில் இரண்டு மூன்று மொழிபெயர்ப்புகள் பல வண்ண அட்டைகளோடு அழகழகான வேதாகமங்களாக நம்முடைய வீட்டின் அலமாரிகளை அலங்கரிக்கின்றன. ஆனால் முதன்முதலாக இந்த வேதாகமம் நம்முடைய கரங்களில் கிடைக்க எத்தனை பரிசுத்தவான்கள் கசையடிகள், நிந்தனைகள், பரிகாச சொற்கள், அவமானங்கள் பட்டார்கள். சிலர் இதற்காக இரத்த சாட்சியாக மரிக்கவும் ஒப்புக்கொடுத்தார்கள். அதில் மூல பாஷையான எபிரேயு, கிரேக்கு மொழிகளில் இருந்து முதன் முதலில் ஆங்கிலத்தில் வேதாகமத்தை மொழிபெயர்த்தவர் வில்லியம் டிண்டேல் என்னும் பரிசுத்தவான். 1494ல் இங்கிலாந்தில் பிறந்த இவர் ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் பட்டம் பெற்று அதன்பின் தனக்குப் பிடித்த இறையியலை படிக்க ஆரம்பித்தார். அப்பொழுது கிரேக்கம், எபிரேயம், லத்தீன் போன்ற மொழிகளில் மட்டுமே வேதாகமம் இருந்தது. ரோம கத்தோலிக்க ஆதிக்கத்தினால் போதகர்கள் கையில் மட்டுமே வேதாகமம் இருந்தது. சாதாரண மக்கள் வேதாகமத்தை வைத்திருக்கவோ வாசிக்கவோ முடியாது. வில்லியம் டிண்டேல்-க்கு எல்லாரும் வே

valentine's day gospel message / Christian message / quotes

வேதநாயகம் சாஸ்திரியார்

கிறிஸ்தவ சமுதாயத்திற்கு மாபெரும் கொடையே வேதநாயகம் சாஸ்திரியார் அவர்களின் நினைவு தினம் (24.01.1864) தஞ்சை சரபோஜி மன்னனின் அரச சபை , மந்திரிகள் மிகவும் மகிழ்ச்சியுடன் கூடி வந்தனர் . சரபோஜி மன்னன் உள்ளே நுழைந்து , தன் இருக்கையில் அமர்ந்தார். அருகில் அவர் நண்பர் வேதநாயகம் சாஸ்திரியார் . அன்று அரசன் ஓர் வித்தியாசமான வேண்டுகோளை சாஸ்திரியாரிடம் கேட்டான் . நீங்கள் என் தெய்வத்தைப் புகழ்ந்து ஒரு பாட்டுப் பாட வேண்டும் . அரசனின் கட்டளையை நிறைவேற்ற முடியாமல் சோகத்துடன் வீடு திரும்பினார் சாஸ்திரியார் . மனைவி காரணத்தைக் கேட்க இருவரும் வேதனையடைந்தனர் . அந்நேரத்தில் அவர் மனதில் எழுந்த வரிகள்தான் , *" ஏசுவையே துதிசெய் நீ மனமே ஏசுவையே துதிசெய் "* என்ற பாடல் . இப்பாடலை அரசவையில் சென்று பாட , அன்று முதல் மன்னன் சாஸ்திரியாரைத் தொந்தரவு செய்யவே இல்லை . விசுவாசத்தில் நிலைத்து நின்று , தன் கவித்திறமையால் அநேகப் பாடல்களை கிறிஸ்துவின் நாம மகிமைக்காக பாடி அவைகளை இன்றும் அழியா காவியமாக்கியவரே சாஸ்திரியார் . தனது 34 வயதிற்குள் 52 நூல்களை எழுதினார் . *" பெத்லகேம் குறவஞ்சி '* என்

Government for people! Private for business???

2015 சென்னை பெருவெள்ளத்தின் போது ஒட்டுமொத்த தனியார் பஸ், கார், ஆட்டோக்கள் கைவிட்ட பொழுது மக்களை வீடு கொண்டு சேர்த்தது  தமிழக அரசின் பொது போக்குவரத்து கழகங்களும் அதன் ஊழியர்களும் தான். No KPN No Parveen No Fastrack No Auto அது மாதிரி கொரானா கிருமியால் பாதிக்கப்படாமல் சீனாவின் யுகான் நகரத்திலிருந்து இந்தியர்களை மீட்டு வர நேற்று சென்றிருப்பது ஏர் இந்தியாவும் அதன் ஊழியர்களும் தான். திரும்பி வரும் போது எந்த பாதிப்புமில்லாமல் தான் வருவோம் என்று எந்த உறுதிப்பாடும் இல்லாமல் பயணப்பட்டிருக்கும் இவர்களுக்கு நாம் என்ன செய்து விட முடியும்? ஏன் ஏர் இந்தியா மட்டும்? Indigo SpiceJet Vistara Go Air போன்ற விமானங்கள் ஏன் இப்பணிக்கு செல்லவில்லை? ஸ்ரீதேவியின் பிணத்துக்காக பறந்த அம்பானியின் விமானம், மோடிக்காக பறக்கும் அதானியின் விமானம் இதற்கெல்லாம் பறக்காதா? பறக்கவே பறக்காது! பறக்க வேண்டும் என்று நாம்  எதிர்ப்பார்ப்பதும் தவறு. நமக்கு உரிமையில்லாத நிறுவனங்கள் அவை. ஆனால் ஏர் இந்தியா நமக்கே நமக்கென்று உரிமையானது. தமிழ்நாட்டில் கொரானா சிறப்பு சிகிட்சைப் பிரிவு தொடங்கப்பட்டிருப்பதும் அரசு மர

Corona Virus Comedy

வைரஸ் #விழுப்புணர்வு 1. தலைவலி 2. தூக்கமின்மை 3. கடுமையான உடல் வலி 4. கண் மங்கலாக தெரிவது 5. மூச்சுவிட முடியாதது. 6. அடிக்கடி மறதி 7. அதிக உடல் வெப்பம் 8. எதையோ இழந்த மனநிலை 9. பேச இயலாமல் வாய் உளறுவது 10. எப்போதும் மயக்கநிலை இது எதுவும் #கொரோனா பாதிப்பு என எண்ணாதீர். கல்யாணம் ஆன அனைவருக்கும் இது இருக்கும்.

Air India comedy

....என்ன சித்தப்பா, நடந்து வர்றீங்க...? வண்டி எங்கே..? === கொஞ்சம் பண பிரச்சினை. அதான் வண்டியை வித்துட்டேன். .... பரவாயில்ல விடுங்க. அரசாங்கமே செலவுக்கு பணம் இல்லாம ஏரோபிளென், இரயில் என ஒவ்வொன்றாக வித்துகிட்டு இருக்கு. அதுக்கு நீங்க பரவாயில்லை. 😄😄😄😄

Thank God everyday for what we have!

🍁A repost from someone worth reflecting on: The beginning of 2020 has revealed enough for deep reflection: That giant Australia is not at all invincible from fire… That mighty China could be shaken by enemies that are too small to be seen… That what we view as small is a fully destructive Volcano… That what we see as a basketball star could fall into a deadly crash… Things are, indeed… never too big nor too small… never too high nor too low… never too powerful nor too faint… never too wealthy nor too broke… never too famous nor too ordinary… Whatever our condition is, … we are all equal… the rain falls on the just and the unjust... the sun rises on the evil and the good... we are all important… we are all gifts… our current status does not define us at all… what we have or possess is never a mighty protective armor… So, in life… don’t be rude… don’t be greedy… don’t be selfish… don’t be ill-mannered… don’t be crabby… don’t be wicked… don't be unemp

*இறந்து மீண்டும் பிறந்தவன்*

▪பொன்.வ.கலைதாசன் நேரில் நேற்றெனைப் பார்த்தவன் நீ யார் என்றெனைக் கேட்டனன். நானோர் நெடுங்கதை சொல்பவன் - அதன் நாயகனோடும் நடப்பவன். கருப்பை ஒன்றில் இருந்தவன், வெறுப்பாய் வந்து பிறந்தவன், பொறுப்பே இன்றித் திரிந்தவன், நெருப்பே போன்று வாழ்ந்தவன்! இறுக்கும் கயிற்றைப் போன்றவன், இருப்பைக் கூட மறந்தவன், இருக்கும் நோக்கம் தொலைத்தவன், இருட்டில் எங்கோ தொலைந்தவன்! இழந்து போனவன், இழிமகன், இதயம் இல்லா கொடியவன், உளையாம் சேற்றினில் உழன்றவன், உலகே வெறுத்த கல்மனன். இருந்த போதிலும் இறைமகன் இயேசுவின் பார்வையில் உயர்ந்தவன். குறுக்கையின் அன்பினைக் கண்டவன், கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டவன். பாவக் கடலில் அமிழ்ந்தவன் பரமனின் அருளால் எழுந்தவன். இரக்க மழையில் நனைந்தவன் இறந்து மீண்டும் பிறந்தவன்!

*துடைக்கும் கரம்*

▪சி.சாம் ஜெஃப்ரி, நண்பர்கள் சிலருடன் மகிழுந்தில் பயணம்! நீண்ட நேரம் நெடுந்தூரம்... நயமான பேச்சில் நகர்ந்தது பயணம்! இதமான கால நிலை பயணத்தைச் சுகமாக்கிக் கொண்டிருந்தது! மெல்ல மேகங்கள் திரள, ஆங்காங்கே மின்னல் கீற்றுகள்... இடையிடையே இடி! லேசாகத் தூறத் தொடங்கியது! மழைத் துளிகள் முன் கண்ணாடியில் விழத் தொடங்கின! நான்கைந்து துளிகள் விழுந்ததும் கண்ணாடித் துடைப்பான்கள் தானாக இயங்கத் தொடங்கின! துளி விழும் வேகம், அடா்த்திக்குத் தக்கவாறு சற்றும் தாமதிக்காமல் தானாகவே துடைத்துத் தொடா்ந்து சுத்தமாக்கின! மழை நிற்கும் வரை இது தொடர்ந்தது! எனக்கு ஆச்சாியம்! விசாாித்தேன். அது தானியங்கி என்றாா் நண்பர்! சாதாரண இயந்திரம், மழைத் துளி விழுந்து கண்ணாடி மங்கியதும் சுத்தம் செய்யத் தானாக விரைகிறது என்றால்... என் வாழ்க்கையில் பெய்யும் சோதனை மழையைத் துடைத்து என்னைத் தெளிவாய் மகிழ்வாய் இயங்க வைக்க என் நேசா் எவ்வளவாய் விரைவாா்? வழியும் என் விழித் துளி துடைத்து என்னைத் தேற்ற என் நேசா் எவ்வளவாய் விரைவாா்? பிரச்னைகளால் மங்கலாகித் தெளிவற

ஊழியம் என்பது....

"ஊழியம் என்பது போர்க்களத்தின் முன்னணியில் நிற்கும் ஓர் அனுபவமாகும். எந்தவொரு போரிலும் நடப்பதுபோல முன்னணியில் பல மரணங்களும் பெருங்காயங்களும் ஏற்படும். ஆவிக்குரிய போராட்டமும் இதற்கு விதிவிலக்கல்ல." - பால் மார்ஷ் மல்கானி எழுதிய *'ஒரு தலைவர் உருவாகிறார்'* என்னும் நூலிலிருந்து.

அர்த்தமுள்ள புத்தாண்டு!!!

ஆ. திருமுருகன் கிறிஸ்தவர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த உலகமும் புத்தாண்டு என்றாலே புத்துணர்வுடன் அநேக புதிய காரியங்களை மற்றும் புதிய துவக்கங்களை நாடித் திரிய ஆரம்பித்துவிடுகிறார்கள். மனம்போன போக்கிலுள்ள களியாட்டுக்களும் கொண்டாட்டங்களும் ஒருபுறம் இருக்க, புத்தாண்டை வெவ்வேறு கோணங்களில் சிந்தித்து சித்தரிக்கிற எண்ணற்ற கிறிஸ்தவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். புத்தாடை உடுத்தி, அறுசுவை உணவு உண்டு புது வருட வாக்குத்தத்த செய்தி மற்றும் வாக்குத்தத்த அட்டை என வாஞ்சித்து நாடுவோரின் எண்ணிக்கைத்தான் எத்தனை! “புது”, “புதிது” மற்றும் “புதிய” போன்ற வார்த்தைகள் வேதாகமத்தில் எங்கு வந்தாலும் உடனே அதை எடுத்துக்கொண்டு, புது வருடத்திற்கான வாக்குத்தத்த செய்தியை பிரசங்கிக்க ஆரம்பித்து விடுகிறார்கள் இன்றைய கிறிஸ்தவ போதகர்கள். உதாரணத்திற்கு, “சிங்காசனத்தின்மேல் வீற்றிருந்தவர்: இதோ, நான் சகலத்தையும் புதிதாக்குகிறேன் என்றார்” என்று வெளி. 21:5-ல் வாசிக்கிற வசனத்தை எடுத்துக்கொண்டு எண்ணற்ற பிரசங்கியார்கள் பிரசங்கித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். யார்? எங்கே? எதற்காக கூறினார்கள்? என்பதெல்லாம் ஒரு பொருட்டே அல்ல