Skip to main content

Posts

red

 

மூலிகை வைத்தியத்தில்குடற்புழு நீக்கம் செய்யலாம்

 https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=60611&ncat=7 இயற்கை முறையில், குடற்புழு நீக்கம் குறித்து, செங்கல்பட்டு மாவட்டம், மேல்மருவத்துார் கால்நடை மருத்துவ பல்கலை உதவிப் பேராசிரியர் முனைவர் ரா.துரைராஜன் கூறியதாவது: அக ஒட்டுண்ணிகள் என அழைக்கப்படும் குடற்புழுக்கள் இளங்கன்றுகளை தாக்கும்.குறிப்பாக, 'ஆம்பிஸ்டோமியாஸிஸ்' என்னும் நோயால் புழுக்கள் வளர்ந்து, சிறு குடலை சேதப்படுத்தும்.இதுபோன்ற நேரங்களில், போதி மற்றும் உடற்சோர்வு ஏற்படும். கீழ்தாடை வீக்கம் ஏற்படுத்தும். இதுதவிர, கறவை மாடுகளுக்கு 'சிஸ்டஸோமியாஸிஸ்' என்கிற நோயால், மாடு மூக்கிற்குள் சதை வளர்ந்து, மாடு மூச்சு விட சிரமம்படுவதோடு, இறக்கவும் நேரிடும்.இதை கட்டுப் படுத்துவதற்கு, மூலிகை மருத்துவத்தில் கட்டுப்படுத்தலாம். உதாரணமாக, 15 கிராம் சீரகம்; 10 கிராம் மஞ்சள்; 5 பூண்டு பல்; 5 மிளகு; ஒரு கை பிடி தும்பை இலை; ஒரு கைபிடி வேப்பிலை; 100 கிராம் வாழை தண்டு சாறு; 50 கிராம் பாகற்காய்; 150 கிராம் பனை வெல்லம் எடுத்துக் கொள்ள வேண்டும்.இதில், சீரகம், கடுகு, மிளகு, பனை வெல்லத்துடன் சேர்த்து இடித்துக் கொள்ள வேண்டும். மே...

Importance For Investor / Traders in Stock Broker/Exchange on Trades

  Dear Investor, With reference to SEBI circular ref no. CIR/MIRSD/15/2011dated August 02, 2011, a SMS and email facility has been provided for ease and convenience of verification of trades. The data is being provided to the clients on an "as is" and "where-is" basis, without any warranty. The Exchange shall not be liable for any delay or any other interruption which may occur in providing the data due to any reason including network (Internet) reasons or snags in the system, break down of the system or any other equipment, server breakdown, maintenance shutdown, breakdown of communication services or inability of the Exchange to send the data. In no event shall the Exchange be liable for any damages, including without limitation direct or indirect, special, incidental, or consequential damages, losses or expenses arising in connection with the data provided by the Exchange through this facility. Dos and Don’ts for Retail Investors Deal only with registered interme...

All Animals Picture

 

He Will quiet you with His Love, He will rejoice over you with singing!!!!

அன்னை தெராசாவைப் பற்றி கிரிக்கெட் வீரர் சித்து பகிர்ந்துக்கொண்ட சாட்சியை வாசியுங்கள்.

1991-92ம் வருடங்களில், ஒரு டெஸ்ட் மேட்ச் விளையாடுவதற்கு ஊதியமாக எங்களுக்கு ரூபாய் 10,000 வழங்கப்படுவது வழக்கம். ஒருமுறை கல்கத்தாவில் நடந்த ஒரு போட்டியின்போது அப்படி எனக்குக் கிடைத்த பணத்தை எடுத்துக்கொண்டு, அன்னை தெரசாவைக் கட்டாயம் சந்திக்கவேண்டும்.. அவர் செய்துவரும் தன்னலமற்ற சேவைக்காக அவருக்கு இந்தப் பணத்தைக் கொடுத்தேயாகவேண்டும்” என்று எனக்குள் ஓர் உந்துதல் ஏற்பட்டு, அவ்வாறே அவரது ஆசிரமத்துக்குச் சென்றேன். “Sisters of Charity” என்ற அந்த அலுவலகம் மிகச்சிறியதாய் இருந்தது. அங்கே இருந்த கன்னியாஸ்திரிகளிடம் ‘Where is Mother?’ என்று கேட்டேன். அதற்கு அங்கே இருந்த ஒரு கன்னியாஸ்திரி, ‘Mother is at the ‘Home for the dying’ என்றார். எனக்கு ‘Home for the dying’ என்று அவர் கூறியதன் பொருள் விளங்கவில்லை. அவர்கள் என்னை அந்த அலுவலகத்தின் பின்புறம் இருந்த ஒரு கட்டிடத்துக்கு அழைத்துச் சென்றனர். அந்தக் கட்டிடத்தினுள் தங்களது வாழ்வின் கடைசி மணித்துளிகளை எண்ணிக்கொண்டிருக்கும், மரணப்படுக்கையில் இருக்கும் நோயாளிகள் தங்கவைக்கப்பட்டிருந்தனர். நான் உள்ளே நுழைந்தபோது அந்த கட்டிடத்தினுள்ளிருந்து ஒரு சகிக்க இ...

ஆச்சி மசாலா உரிமையாளரை உங்களில் எத்தனை பேருக்கு தெரியும் ?..

ஆச்சி மசாலா உரிமையாளரை உங்களில் எத்தனை பேருக்கு தெரியும் ?.. 'ஆச்சி மசாலா ' ஏ. டி. பத்மசிங் ஐசக் தூத்துக்குடி மாவட்டத்தில் சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்தவர். 12 வயதிலேயே தனது தந்தையை இழந்தவர். பள்ளி ஓய்வு நாட்களிலே ஒரு பெட்டிக்கடையை நடத்தி அதன் மூலம் தனது கல்லூரி படிப்பை முடித்தவர். அவரது அம்மா 80 ரூபாய்க்கு பழைய சைக்கிள் ஒன்றை அவர்க்கு வாங்கி கொடுத்தார். அந்த சைக்கிளில் அவர் தினமும் 32கி. மீ. பயணம் செய்து கல்லூரிக்கு படிக்க சென்றார். படிப்பை முடித்தவுடன், அடுத்து வேலை தேடி சூட்கேசில் இரண்டு சட்டை துணிகளுடன் சென்னைக்கு வந்தார். Godrej நிறுவனத்தில் Salesman ஆக சேர்ந்தார். அப்பொழுதுதான் கிராமங்களில் ஹேர் டை விற்கும்படி இவருக்கு கொடுக்கப்பட்ட பெரிய சவால். முதலில் கடைக்காரர்கள் வாங்க ஆர்வம் காட்டவில்லை. தனது புதிய யுக்தியுடன் காங்கேயம் மாட்டு சந்தைக்கு சென்று அங்குள்ள வயதான மாடுகள் சிலவற்றின் வாலுக்கு ஹேர் டை அடித்து காட்டியதும் மாடுகள் கூடுதல் விலைக்கு விற்றுப் போனது. மாடுகளின் உரிமையாளர்கள் வியந்து போய் தங்கள் நரைத்த மீசைகளுக்கு அந்த 'டை' யை போட்டி ...

விலையேறப்பெற்ற

விலையேறப்பெற்ற ..  God's part..  தேவனுடைய பகுதி.. 1. விலையேறப்பெற்ற தேவனுடைய அன்பு.. அவர் தம்முடைய ஜீவனை நமக்காக கொடுத்ததினாலே அன்பு இன்னதென்று அறிந்திருக்கிறோம். நாமும் சகோதரருக்காக ஜீவனைக்கொடுக்கக் கடனாளிகளாயிருக்கிறோம். 1 யோவான் 3:16 2. விலையேறப்பெற்ற  கிறிஸ்துவின் இரத்தம்.. குற்றமில்லாத மாசற்ற ஆட்டுக்குட்டியாகிய கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தத்தினாலே மீட்கப்பட்டீர்களென்று அறிந்திருக்கிறீர்களே. 1 பேதுரு 1.19 3. விலையேறப்பெற்ற  மூலைக்கல்லாகிய கிறிஸ்து..  ஆதலால் கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறதாவது: இதோ, அஸ்திபாரமாக ஒரு கல்லை நான் சீயோனிலே வைக்கிறேன், அது பரீட்சிக்கப்பட்டதும், விலையேறப்பெற்றதும், திட அஸ்திபாரமுள்ளதுமான மூலைக்கல்லாயிருக்கும், விசுவாசிக்கிறவன் பதறான். ஏசாயா 28.16 4. விலையேறப்பெற்ற  ஜீவனுள்ள கல்லாகிய கிறிஸ்து. . மனுஷரால் தள்ளப்பட்டதாயினும், தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டதும் விலையேறப்பெற்றதுமாயிருக்கிற ஜீவனுள்ள கல்லாகிய அவரிடத்தில் சேர்ந்தவர்களாகிய நீங்களும். 1 பேதுரு 2.4 5. விலையேறப்பெற்ற ஞானமாகிய கிறிஸ்து.. ஓப்பீ...

இன்னும் ...

கிறிஸ்துவுடன் ஆரம்பியுங்கள் இந்த நாளை .. ====================  நம்மிடம் ஆண்டவர் கேட்கிறார் ..  இன்னும்.. YET? 1. நீங்களும் இன்னும் உணர்வில்லாதவர்களாயிருக்கிறீர்களா? அதற்கு இயேசு: நீங்களும் இன்னும் உணர்வில்லாதவர்களாயிருக்கிறீர்களா? மத்தேயு 15.16 2. இன்னும் உங்கள் இருதயம் கடினமாயிருக்கிறதா? இயேசு அதை அறிந்து, அவர்களை நோக்கி, உங்களிடத்தில் அப்பங்கள் இல்லாதபடியினால் நீங்கள் யோசனை பண்ணுகிறதென்ன? இன்னும் சிந்தியாமலும் உணராமலும் இருக்கிறீர்களா?இன்னும் உங்கள் இருதயம் கடினமாயிருக்கிறதா? மாற்கு 8.17 3. இன்னும் உன்னிடத்தில் ஒரு குறைவு உண்டு? இயேசு அதைக் கேட்டு: இன்னும் உன்னிடத்தில் ஒரு குறைவு உண்டு, உனக்கு உண்டானவைகளையெல்லாம் விற்றுத் தரித்திரருக்குக் கொடு, அப்பொழுது பரலோகத்திலே உனக்குப் பொக்கிஷம் உண்டாயிருக்கும், பின்பு என்னைப் பின்பற்றிவா என்றார். லூக்கா 18.22 4. இன்னும் ..  நித்திரை செய்யட்டும் என்பாயோ?_ இன்னும் கொஞ்சம் உறங்கட்டும், இன்னும் கொஞ்சம் கைமுடங்கிக்கொண்டு நித்திரை செய்யட்டும் என்பாயோ? நீதிமொழிகள் 24.33 5. நீங்கள் இன்னும் எதிர்த்துநிற்கவில்லை...

#ஜெபம் என்ற துப்பாக்கியில்...

#ஜெபம் என்ற துப்பாக்கியில்...       காவல்துறை உயரதிகாரி ஒருவர் இருந்தார். அவருக்கு ஒரே மகன். அவர் எந்தக் காரியத்தில் ஈடுபட்டாலும் நன்றாக ஜெபித்த பின்னரே ஆரம்பிப்பது வழக்கம். வேலை நேரம் தவிர மற்ற நேரங்களிலெல்லாம் பெரும்பாலும் ஜெபத்திலும் , வேதவாசிப்பிலும் நேரத்தை செலவிடுவார்..                 இதை சிறுபிராயம் முதலாகவே கண்டு வளர்ந்த அவரது மகனுக்கு மனதில் ஒரு சந்தேகம்  எழுந்தது . " அப்பாவைக் கண்டால்  ஊரே மதிக்கிறது . அவர் கட்டளையிட்டால் செய்து முடிக்க ஆயிரம் அதிகாரிகள் உண்டு . அவரைக்  கண்டு  பயப்படுகிறவர்களும் அநேகர் இருக்கிறார்கள். _இப்படியெல்லாம் இருந்தும்  அவர் இப்படி ஒவ்வொரு காரியத்திலும் தொட்டதற்கெல்லாம் ஜெபிப்பது  அவரது தன்னம்பிக்கையின்மையக்  காட்டுவது போலில்லையா? அவரது பதவியும் , புத்திசாலித்தனமும்தானே  அவரது வெற்றிக்குப்  பின்புலமாய் அமைவது?" இந்தக் கேள்வி மனதுக்குள் இருந்தாலும் அவரிடம் நேரடியாகக் கேட்டதில்லை. அவனையும் அவர் நல்ல தேவபக்தியுடனும் , ஒழுக்கத்துடனுந்தான் வளர்த்தி...
* இது தற்செயலானதா ??? *   சீனா பூகம்பம்   26 ஜூலை 1976   குஜராத் பூகம்பம்   26 ஜனவரி 2001.   இந்தியப் பெருங்கடலில் சுனாமி   26 டிசம்பர் 2004   மும்பை தாக்குதல் 26/11   26 நவம்பர் 2008   தைவான் பூகம்பம்   26 ஜூலை 2010   ஜப்பான் பூகம்பம்   26 பிப்ரவரி 2010   இப்போது நேபாள பூகம்பம்   26 ஏப்ரல் 2015.   * இது எப்போதும் "26" ஏன்? *  இதைப் பற்றி நாம் சிந்திக்க விரும்பும் பல சுவாரஸ்யமான உண்மைகள்:  நாம் உணர்ந்தோமா ... ???  ஆச்சே சுனாமி 26-12-2004,  ஜோக்ஜா நிலநடுக்கம்  26-05-2006  மெராபி வெடிப்பு மவுண்ட்  26-10-2010  தென்கரோங் பாலம்  சமரிந்தா, இந்தோனேசியா  சுருக்கு  26-09-2013  26 சரி  ஹையான் சூறாவளி  26-04-2015 அன்று நேபாளத்தில் சமீபத்தில் ஏற்பட்ட பூகம்பங்கள்.  26 ஆம் தேதி தேதியில் ஏன் இது நிகழ்கிறது?  இது தற்செயலானதா ?? பைபிளில், கடவுள் சொன்னதைப் படியுங்கள் -ஆகாய் 2: 6 "மீண்டும் ஒரு முறை (இ...

வீட்டுக்கு முன் தெளிக்கும் சாணம், முகத்திற்கு மஞ்சள், வீடுகளில் திண்ணை, தாம்பூலம் மெல்லும் பழக்கம் : வைரஸ் நோய்களை குணமாக்கும் தமிழர் பாரம்பரியம்.

சென்னை :உயிர்கொல்லி வைரஸான கொரோனாவிடம் இருந்து தப்பிக்க மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் அனைத்தும் தமிழர்கள் பாரம்பரியமாக கடைபிடித்து வந்த வாழ்க்கை முறைகளின் பிரதிபலிப்பாக இருக்கிறது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை எட்டாயிரத்தை தொட்டுள்ளது. 1,97,135 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது. இத்தாலியில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஒரே நாளில் 16%  அதிகரித்துள்ளது. இந்தியாவில் இதுவரை 143 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மாநில, மத்திய அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் கொரோனாவிடம் இருந்து தப்பிக்க மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் அனைத்தும் தமிழர்கள் பாரம்பரியமாக கருதப்படுகிறது. தோளில் துண்டு அணிவதில் இருந்து வீட்டு வாசலில் தண்ணீர் தொட்டி வைப்பது, மாலை நேரத்தில் சாம்பிராணி போடுவது என அனைத்தும் தமிழர்கள் மேற்கொண்ட நோய் தடுப்பு நடவடிக்கை என்கிறார் எழுத்தாளர் ஆதிநெடுஞ்செழியன். இந்நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர்,'உணவு முறைகளாலேயே வியாதிகளை விரட்டியது தமிழ் மரபு.பழக்க வழக்கங்கள் வியாதிகளை...

முதல் பெண் இரத்த சாட்சி நாகம்மாள்

“...என்னைப் பற்றும் விசுவாசத்தை நீ மறுதலியாமலிருந்ததையும் அறிந்திருக்கிறேன்.” – வெளி. 2:13 நம் தமிழ்நாட்டில் கிறிஸ்தவ மாவட்டம் என்றவுடன் நம் நினைவிற்கு வருவது திருநெல்வேலிதான். அப்பகுதியின் முதல் பெண் இரத்த சாட்சி நாகம்மாள் ஆவார். 18ம் நூற்றாண்டிலிருந்தே அப்பகுதியில் நற்செய்தி பரவ ஆரம்பித்தது. கிழக்கிந்திய வர்த்தகக் குழுவின் குருவான ஜேம்ஸ் ஹாப் அவர்கள் பாளையங்கோட்டையில் தங்கி ஊழியம் செய்ய ஆரம்பித்தார். ஸ்ரீவைகுண்டத்தின் அருகிலுள்ள திருபுளியங்குடி (TPகுடி) யிலுள்ள நம்பி என்ற விவசாயியின் மூன்று பிள்ளைகளில் இளையவன் சுப்பிரமணி வேலை நிமித்தமாக ஸ்ரீவை போகும்போது தெருப்பிரசங்கம் செய்து கொண்டிருந்தார் ஒரு உபதேசியார். பிரசங்கம் முழுவதையும் கேட்டு விட்டு ஒரு நற்செய்தி நூலையும் வாங்கிக் கொண்டான். வீட்டிற்கு வந்து தாயாரிடம் நாம் வணங்கும் தெய்வமெல்லாம் நம்மிடம் "அது, இது" என கேட்கிறது.  ஆனால் இந்த தெய்வமோ உயிரையே நமக்காக கொடுத்திருக்கிறார். "சொர்க்கம் செல்ல ஒரே வழி இயேசுகிறிஸ்துதானாம்" என்றான். நேரம் கிடைக்கும்பொழுதெல்லாம் கையிலுள்ள யோவான் சுவிசேஷத்தை வாசித்து வீட்டிலுள்ளவர...

ரோஸ்ஆலன்

“பகைஞனையும் பழிகாரனையும் அடக்கிப்போட, ...பாலகர் வாயினால் பெலன் உண்டு பண்ணினீர்.” – சங்கீதம் 8:2 மேரி இராணி இங்கிலாந்தை அரசாண்ட காலத்தில் கோல்ஸ்டர் என்ற இடத்தில் ரோஸ்ஆலன் வாழ்ந்து வந்தாள். அவள் பெற்றோரும் அவளும் இயேசுவை இரட்சகராக ஏற்றுக் கொண்டவர்கள்.  இப்படிப்பட்டவர்களை சிறையில் அடைத்து அவர்களுக்கு மரணதண்டனை வழங்கி வந்தார் மேரி இராணி. ஆனால் ரோஸ் ஆலனின் குடும்பத்தினர் ஆண்டவருக்காக துணிவுடன் வாழ்ந்தனர். ஒரு நாள் அவள் பெற்றோர் ஜெபக் கூட்டத்திற்குச் சென்று வந்த போது அவர்களை கவனித்து விட்ட பேலிட் தன் ஆட்களுடன் நள்ளிரவு 2 மணிக்கு சிறைக்கு அழைத்துச் செல்ல வந்தார். அப்போது தன் தாய்க்கு தண்ணீர் மொள்ள வந்த ரோஸ் ஆலனிடம் பேலிட் "சிறுபெண்ணே எப்படியாகிலும் உன்னுடைய பெற்றோர் இயேசுவை மறுதலிக்கும்படி செய்" என்றான். அதற்கு அவள் "என்னைக் காட்டிலும் பரிசுத்த ஆவியானவர் அவர்களை சரியாய் நடத்துவார்" என்றாள். உடனே அவன் கோபங்கொண்டவனாய் "நீயும் அந்தக் கூட்டத்தைச் சார்ந்தவளா? உன் பெற்றோருடன் நீயும் மரிக்க விரும்புகிறாயா?" என்றான். அவள் "தேவன் என்னை அதற்கென்று அழைப்பாரானால் அத...

க்ளாரிந்தா - தமிழக கிறிஸ்தவம்

தமிழக கிறிஸ்தவம்... பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்து...... அவரது தாய் இயக்கமான RSS  ஆதரவாளர்களின் கூக்குரல் பெரிதாய் ஒலித்துக்கொண்டிருக்கிறது.. அவர்கள் மட்டும்தான் இந்தியர்கள் என்பது போலவும், கிறிஸ்தவர்களும் இஸ்லாமியர்களும் ஏதோ வெளிநாட்டிலிருந்து வந்தது போலவும்.. அவர்களுக்கு மட்டும்தான் இந்த தேசமும் தேசபக்தியும் சொந்தம் என்பது போலவும்..! இந்தியாவில் உள்ள கிறிஸ்தவர்கள் எல்லோரும் பணத்திற்காக மதம் மாறியவர்கள் என்றும், இப்பொழுதும் பணம் கொடுத்துதான் மதம் மாறிக் கொண்டிருப்பதாகவும் ஒரு மாயக் குரல் உலா வந்து கொண்டிருக்கிறது. பணம் கொடுத்து, ஒருவனை மதம் மாற்றிவிட முடியும் என்றால், இப்பொழுது உங்கள் கையில்தானே அதிகாரம் இருக்கிறது..இந்தியாவின் கஜானாவே உங்கள் கையில்தானே இருக்கிறது. உங்களிடம்தானே, ஒரு வேளை உடுத்தும் ஒரு ஆடைக்கு 10 இலட்ச ரூபாய் செலவளிக்கும் வகையில் தகுதியுள்ள தொழிலதிபர்கள் நண்பர்களாக இருக்கின்றார்கள்? பிறகு என்ன தயக்கம்? இருக்கும் பணத்தை அள்ளி வீசி, இந்தியாவில் உள்ள எல்லா கிறிஸ்தவர்களையும், இஸ்லாமியர்களையும் மதம் மாற்றிவிட வேண்டியதுதானே? யார் உங்களைத் தடை ...

வில்லியம் டிண்டேல்

“என் வேதத்தின் மகத்துவங்களை அவர்களுக்கு எழுதிக்கொடுத்தேன்; அவைகளை அந்நியகாரியமாக எண்ணினார்கள்.” – ஓசியா 8:12 இன்று நம்முடைய இல்லங்களில் இரண்டு மூன்று மொழிபெயர்ப்புகள் பல வண்ண அட்டைகளோடு அழகழகான வேதாகமங்களாக நம்முடைய வீட்டின் அலமாரிகளை அலங்கரிக்கின்றன. ஆனால் முதன்முதலாக இந்த வேதாகமம் நம்முடைய கரங்களில் கிடைக்க எத்தனை பரிசுத்தவான்கள் கசையடிகள், நிந்தனைகள், பரிகாச சொற்கள், அவமானங்கள் பட்டார்கள். சிலர் இதற்காக இரத்த சாட்சியாக மரிக்கவும் ஒப்புக்கொடுத்தார்கள். அதில் மூல பாஷையான எபிரேயு, கிரேக்கு மொழிகளில் இருந்து முதன் முதலில் ஆங்கிலத்தில் வேதாகமத்தை மொழிபெயர்த்தவர் வில்லியம் டிண்டேல் என்னும் பரிசுத்தவான். 1494ல் இங்கிலாந்தில் பிறந்த இவர் ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் பட்டம் பெற்று அதன்பின் தனக்குப் பிடித்த இறையியலை படிக்க ஆரம்பித்தார். அப்பொழுது கிரேக்கம், எபிரேயம், லத்தீன் போன்ற மொழிகளில் மட்டுமே வேதாகமம் இருந்தது. ரோம கத்தோலிக்க ஆதிக்கத்தினால் போதகர்கள் கையில் மட்டுமே வேதாகமம் இருந்தது. சாதாரண மக்கள் வேதாகமத்தை வைத்திருக்கவோ வாசிக்கவோ முடியாது. வில்லியம் டிண்டேல்-க்கு எல்லாரும் வே...

valentine's day gospel message / Christian message / quotes

வேதநாயகம் சாஸ்திரியார்

கிறிஸ்தவ சமுதாயத்திற்கு மாபெரும் கொடையே வேதநாயகம் சாஸ்திரியார் அவர்களின் நினைவு தினம் (24.01.1864) தஞ்சை சரபோஜி மன்னனின் அரச சபை , மந்திரிகள் மிகவும் மகிழ்ச்சியுடன் கூடி வந்தனர் . சரபோஜி மன்னன் உள்ளே நுழைந்து , தன் இருக்கையில் அமர்ந்தார். அருகில் அவர் நண்பர் வேதநாயகம் சாஸ்திரியார் . அன்று அரசன் ஓர் வித்தியாசமான வேண்டுகோளை சாஸ்திரியாரிடம் கேட்டான் . நீங்கள் என் தெய்வத்தைப் புகழ்ந்து ஒரு பாட்டுப் பாட வேண்டும் . அரசனின் கட்டளையை நிறைவேற்ற முடியாமல் சோகத்துடன் வீடு திரும்பினார் சாஸ்திரியார் . மனைவி காரணத்தைக் கேட்க இருவரும் வேதனையடைந்தனர் . அந்நேரத்தில் அவர் மனதில் எழுந்த வரிகள்தான் , *" ஏசுவையே துதிசெய் நீ மனமே ஏசுவையே துதிசெய் "* என்ற பாடல் . இப்பாடலை அரசவையில் சென்று பாட , அன்று முதல் மன்னன் சாஸ்திரியாரைத் தொந்தரவு செய்யவே இல்லை . விசுவாசத்தில் நிலைத்து நின்று , தன் கவித்திறமையால் அநேகப் பாடல்களை கிறிஸ்துவின் நாம மகிமைக்காக பாடி அவைகளை இன்றும் அழியா காவியமாக்கியவரே சாஸ்திரியார் . தனது 34 வயதிற்குள் 52 நூல்களை எழுதினார் . *" பெத்லகேம் குறவஞ்சி '* என்...

Government for people! Private for business???

2015 சென்னை பெருவெள்ளத்தின் போது ஒட்டுமொத்த தனியார் பஸ், கார், ஆட்டோக்கள் கைவிட்ட பொழுது மக்களை வீடு கொண்டு சேர்த்தது  தமிழக அரசின் பொது போக்குவரத்து கழகங்களும் அதன் ஊழியர்களும் தான். No KPN No Parveen No Fastrack No Auto அது மாதிரி கொரானா கிருமியால் பாதிக்கப்படாமல் சீனாவின் யுகான் நகரத்திலிருந்து இந்தியர்களை மீட்டு வர நேற்று சென்றிருப்பது ஏர் இந்தியாவும் அதன் ஊழியர்களும் தான். திரும்பி வரும் போது எந்த பாதிப்புமில்லாமல் தான் வருவோம் என்று எந்த உறுதிப்பாடும் இல்லாமல் பயணப்பட்டிருக்கும் இவர்களுக்கு நாம் என்ன செய்து விட முடியும்? ஏன் ஏர் இந்தியா மட்டும்? Indigo SpiceJet Vistara Go Air போன்ற விமானங்கள் ஏன் இப்பணிக்கு செல்லவில்லை? ஸ்ரீதேவியின் பிணத்துக்காக பறந்த அம்பானியின் விமானம், மோடிக்காக பறக்கும் அதானியின் விமானம் இதற்கெல்லாம் பறக்காதா? பறக்கவே பறக்காது! பறக்க வேண்டும் என்று நாம்  எதிர்ப்பார்ப்பதும் தவறு. நமக்கு உரிமையில்லாத நிறுவனங்கள் அவை. ஆனால் ஏர் இந்தியா நமக்கே நமக்கென்று உரிமையானது. தமிழ்நாட்டில் கொரானா சிறப்பு சிகிட்சைப் பிரிவு தொடங்கப்பட்டிருப்பதும...