Skip to main content

இன்னும் ...

கிறிஸ்துவுடன் ஆரம்பியுங்கள் இந்த நாளை ..
====================
 நம்மிடம் ஆண்டவர் கேட்கிறார் ..

 இன்னும்.. YET?

1. நீங்களும் இன்னும் உணர்வில்லாதவர்களாயிருக்கிறீர்களா?

அதற்கு இயேசு: நீங்களும் இன்னும் உணர்வில்லாதவர்களாயிருக்கிறீர்களா?
மத்தேயு 15.16

2. இன்னும் உங்கள் இருதயம் கடினமாயிருக்கிறதா?

இயேசு அதை அறிந்து, அவர்களை நோக்கி, உங்களிடத்தில் அப்பங்கள் இல்லாதபடியினால் நீங்கள் யோசனை பண்ணுகிறதென்ன? இன்னும் சிந்தியாமலும் உணராமலும் இருக்கிறீர்களா?இன்னும் உங்கள் இருதயம் கடினமாயிருக்கிறதா?
மாற்கு 8.17

3. இன்னும் உன்னிடத்தில் ஒரு குறைவு உண்டு?

இயேசு அதைக் கேட்டு: இன்னும் உன்னிடத்தில் ஒரு குறைவு உண்டு, உனக்கு உண்டானவைகளையெல்லாம் விற்றுத் தரித்திரருக்குக் கொடு, அப்பொழுது பரலோகத்திலே உனக்குப் பொக்கிஷம் உண்டாயிருக்கும், பின்பு என்னைப் பின்பற்றிவா என்றார்.
லூக்கா 18.22

4. இன்னும் ..
 நித்திரை செய்யட்டும் என்பாயோ?_

இன்னும் கொஞ்சம் உறங்கட்டும், இன்னும் கொஞ்சம் கைமுடங்கிக்கொண்டு நித்திரை செய்யட்டும் என்பாயோ?
நீதிமொழிகள் 24.33

5. நீங்கள் இன்னும் எதிர்த்துநிற்கவில்லையே?

பாவத்திற்கு விரோதமாய்ப் போராடுகிறதில் இரத்தஞ்சிந்தப்படத்தக்கதாக நீங்கள் இன்னும் எதிர்த்துநிற்கவில்லையே.
எபிரேயர் 12
====================

 ஆலோசனைகள் ..

1. பரிசுத்தமுள்ளவன் இன்னும் பரிசுத்தமாகட்டும் ...

 அநியாயஞ்செய்கிறவன் இன்னும் அநியாயஞ்செய்யட்டும், அசுத்தமாயிருக்கிறவன் இன்னும் அசுத்தமாயிருக்கட்டும், நீதியுள்ளவன் இன்னும் நீதிசெய்யட்டும், பரிசுத்தமுள்ளவன் இன்னும் பரிசுத்தமாகட்டும்.
வெளிப்படுத்தின விசேஷம் 22.11

2. இன்னும் உலக வழக்கத்தின்படி பிழைக்க கூடாது ..

நீங்கள் கிறிஸ்துவுடனேகூட உலகத்தின் வழிபாடுகளுக்கு மரித்ததுண்டானால், இன்னும் உலக வழக்கத்தின்படி பிழைக்கிறவர்கள்போல
கொலோசெயர் 2.20

3. அன்பிலே இன்னும் அதிகமாய்ப் பெருகவும் ..

அந்தப்படி நீங்கள் மக்கெதோனியா நாடெங்குமுள்ள சகோதரரெல்லாருக்கும் செய்துவருகிறீர்கள். சகோதரரே, அன்பிலே நீங்கள் இன்னும் அதிகமாய்ப் பெருகவும்.
1 தெசலோனிக்கேயர் 4.10

4. அறியவேண்டியபிரகாரமாக இன்னும் அறியவில்லை ..

ஒருவன் தான் ஏதேனும் ஒன்றை அறிந்தவனென்று எண்ணிக்கொள்வானானால், ஒன்றையும் அறியவேண்டியபிரகாரமாக அவன் இன்னும் அறியவில்லை.
1 கொரிந்தியர் 8.2

5. அறிவிலும் எல்லா உணர்விலும் இன்னும் அதிகமாய்ப் பெருகவும் ..

மேலும், உத்தமமானவைகளை நீங்கள் ஒப்புக்கொள்ளத்தக்கதாக உங்கள் அன்பானது அறிவிலும் எல்லா உணர்விலும் இன்னும் அதிகமாய்ப் பெருகவும்,
பிலிப்பியர் 1.9
====================

 தீர்மானங்கள் ..

1. நான் இன்னும் துதிப்பேன் ..

என் ஆத்துமாவே, நீ ஏன் கலங்குகிறாய்? ஏன் எனக்குள் தியங்குகிறாய்? தேவனை நோக்கிக் காத்திரு, என் முகத்திற்கு இரட்சிப்பும் என் தேவனுமாயிருக்கிறவரை நான் இன்னும் துதிப்பேன்
சங்கீதம் 43.5, 42.5, 42.11

2. நான் இன்னும் உம்மண்டையில் இருக்கிறேன் ..

அவைகளை நான் எண்ணப்போனால், மணலைப்பார்க்கிலும் அதிகமாம், நான் விழிக்கும்போது இன்னும் உம்மண்டையில் இருக்கிறேன்.
சங்கீதம் 139.18

3. நான் இன்னும் ஜெபம்பண்ணுவேன் ..

 நீதிமான் என்னைத் தயவாய்க்குட்டி, என்னைக்கடிந்துகொள்ளட்டும், அது என் தலைக்கு எண்ணெயைப்போலிருக்கும், என் தலை அதை அல்லத்தட்டுவதில்லை, அவர்கள் இக்கட்டுகளில் நான் இன்னும் ஜெபம்பண்ணுவேன்.
சங்கீதம் 141.5

 பிரியமானவர்களே ,

 இப்பொழுது தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோம், இனி எவ்விதமாயிருப்போமென்று இன்னும் வெளிப்படவில்லை . ஆகிலும் அவர் வெளிப்படும்போது அவர் இருக்கிறவண்ணமாகவே நாம் அவரைத் தரிசிப்பதினால், அவருக்கு ஒப்பாயிருப்போமென்று அறிந்திருக்கிறோம்.
1 யோவான் 3.2

shalomsteward1@gmail.com

Comments

Popular posts from this blog

Configure DB2 in IBM Rational Application Developer (RAD)

How to Configure DB2 in IBM Rational Application Developer (RAD)? Step: 1 Go to Data Source Explorer Step: 2 Right Click on   Database connection and click New Step: 3 Select   Db2 for Linux, UNIX and Windows from Select a database manager and enter appropriate details in Properties Step: 4 Click on  Test connection Step: 4 Click on  Finish

He Will quiet you with His Love, He will rejoice over you with singing!!!!

red