Skip to main content

வில்லியம் டிண்டேல்



“என் வேதத்தின் மகத்துவங்களை அவர்களுக்கு எழுதிக்கொடுத்தேன்; அவைகளை அந்நியகாரியமாக எண்ணினார்கள்.” – ஓசியா 8:12

இன்று நம்முடைய இல்லங்களில் இரண்டு மூன்று மொழிபெயர்ப்புகள் பல வண்ண அட்டைகளோடு அழகழகான வேதாகமங்களாக நம்முடைய வீட்டின் அலமாரிகளை அலங்கரிக்கின்றன. ஆனால் முதன்முதலாக இந்த வேதாகமம் நம்முடைய கரங்களில் கிடைக்க எத்தனை பரிசுத்தவான்கள் கசையடிகள், நிந்தனைகள், பரிகாச சொற்கள், அவமானங்கள் பட்டார்கள். சிலர் இதற்காக இரத்த சாட்சியாக மரிக்கவும் ஒப்புக்கொடுத்தார்கள். அதில் மூல பாஷையான எபிரேயு, கிரேக்கு மொழிகளில் இருந்து முதன் முதலில் ஆங்கிலத்தில் வேதாகமத்தை மொழிபெயர்த்தவர் வில்லியம் டிண்டேல் என்னும் பரிசுத்தவான்.

1494ல் இங்கிலாந்தில் பிறந்த இவர் ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் பட்டம் பெற்று அதன்பின் தனக்குப் பிடித்த இறையியலை படிக்க ஆரம்பித்தார். அப்பொழுது கிரேக்கம், எபிரேயம், லத்தீன் போன்ற மொழிகளில் மட்டுமே வேதாகமம் இருந்தது. ரோம கத்தோலிக்க ஆதிக்கத்தினால் போதகர்கள் கையில் மட்டுமே வேதாகமம் இருந்தது. சாதாரண மக்கள் வேதாகமத்தை வைத்திருக்கவோ வாசிக்கவோ முடியாது. வில்லியம் டிண்டேல்-க்கு எல்லாரும் வேதத்தை வாசிக்க வேண்டும் என்ற ஆசை உண்டாகியது. ஏற்கெனவே 8 பாஷைகள் தெரிந்த அவர் கிரேக்க மொழியையும் கற்றார். எப்படியாவது புதிய ஏற்பாட்டை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க வேண்டும் என்று கி.பி. 1523 ல் லண்டன் பட்டணத்திற்கு சென்றார். அங்கும் யாரும் இவரை ஏற்றுக்கொள்ளவில்லை. பின் ஜெர்மனி சென்று மார்டின் லூதருடன் தங்கியிருந்து ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். இங்கு ஒரு வருடத்தில் எபிரேய மொழியை பயின்று 1525 ல் ஜெர்மனியில் தன்னுடைய ஆங்கில மொழிபெயர்ப்பை வெளியிட்டு அச்சிடப்பட்ட ஆங்கில வேதாகமத்தை இங்கிலாந்திற்குள் கள்ளத்தனமாக கொண்டுவந்தார். ஆனால் ஆங்கில வேதாகமம் வைத்திருப்பது தெரிந்ததும் வேதாகமங்கள் பறிக்கப்பட்டு எரிக்கப்பட்டன. இவரை கைது செய்ய அரசனால் கட்டளை பிறப்பிக்கப்பட்டபோது ஐந்து வருடம் தலைமறைவானார். பின் தன் நண்பனால் காட்டிக்கொடுக்கப்பட்டு 500 நாட்கள் சிறைச்சாலையில் பல சித்ரவதைகளை அனுபவித்து, குரல்வளை நெரிக்கப்பட்டு, ஒரு கம்பத்தில் கட்டி வைத்து தீயிட்டு கொளுத்தப்பட்டார். அவர் மரிக்கும்போது “ஆண்டவரே இங்கிலாந்து மன்னனின் கண்களைத் திறந்தருளும்” என்பதுதான் அவருடைய கடைசி வார்த்தைகள். அதேபோல் 1838 ல் அதே எட்டாம் ஹென்றியால் ஆங்கில வேதாகமம் அரசாங்கத்தின் மூலமே வெளியிடப்பட்டது. அதன்பிறகுதான் ஒவ்வொரு பாஷையிலும் வேதாகமம் பல பாடுகள் பிரச்சனைகளுடே வெளியிடப்பட்டது.

நண்பரே! வேதாகமத்தை வீட்டில் வாங்கி அடுக்கி வைப்பதாலோ அழகு பார்ப்பதாலோ ஆசீர்வாதத்தை பெற முடியாது. எத்தனையோ அடைக்கப்பட்ட நாடுகளில் வேதாகமத்தை வைக்க சுதந்திரமில்லை. ஆண்டவர் நமக்கு கொடுத்துள்ள இந்த கிருபையின் நாட்களில் வேதத்தை இரவும் பகலும் பிரியமாய் தியானித்து மிகுந்த சமாதானத்தைப் பெற்றுக் கொள்வோம்.
- Mrs. ஜெபக்கனி ஸ்டீபன்


Comments

  1. How to Play Blackjack and Win - DRMCD
    Blackjack is the 서귀포 출장마사지 easiest, and most rewarding way 이천 출장안마 to 동두천 출장안마 play blackjack. As a blackjack 강릉 출장샵 player, you're playing against 김제 출장안마 the dealer, or in the same room.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

Configure DB2 in IBM Rational Application Developer (RAD)

How to Configure DB2 in IBM Rational Application Developer (RAD)? Step: 1 Go to Data Source Explorer Step: 2 Right Click on   Database connection and click New Step: 3 Select   Db2 for Linux, UNIX and Windows from Select a database manager and enter appropriate details in Properties Step: 4 Click on  Test connection Step: 4 Click on  Finish

அன்னை தெராசாவைப் பற்றி கிரிக்கெட் வீரர் சித்து பகிர்ந்துக்கொண்ட சாட்சியை வாசியுங்கள்.

1991-92ம் வருடங்களில், ஒரு டெஸ்ட் மேட்ச் விளையாடுவதற்கு ஊதியமாக எங்களுக்கு ரூபாய் 10,000 வழங்கப்படுவது வழக்கம். ஒருமுறை கல்கத்தாவில் நடந்த ஒரு போட்டியின்போது அப்படி எனக்குக் கிடைத்த பணத்தை எடுத்துக்கொண்டு, அன்னை தெரசாவைக் கட்டாயம் சந்திக்கவேண்டும்.. அவர் செய்துவரும் தன்னலமற்ற சேவைக்காக அவருக்கு இந்தப் பணத்தைக் கொடுத்தேயாகவேண்டும்” என்று எனக்குள் ஓர் உந்துதல் ஏற்பட்டு, அவ்வாறே அவரது ஆசிரமத்துக்குச் சென்றேன். “Sisters of Charity” என்ற அந்த அலுவலகம் மிகச்சிறியதாய் இருந்தது. அங்கே இருந்த கன்னியாஸ்திரிகளிடம் ‘Where is Mother?’ என்று கேட்டேன். அதற்கு அங்கே இருந்த ஒரு கன்னியாஸ்திரி, ‘Mother is at the ‘Home for the dying’ என்றார். எனக்கு ‘Home for the dying’ என்று அவர் கூறியதன் பொருள் விளங்கவில்லை. அவர்கள் என்னை அந்த அலுவலகத்தின் பின்புறம் இருந்த ஒரு கட்டிடத்துக்கு அழைத்துச் சென்றனர். அந்தக் கட்டிடத்தினுள் தங்களது வாழ்வின் கடைசி மணித்துளிகளை எண்ணிக்கொண்டிருக்கும், மரணப்படுக்கையில் இருக்கும் நோயாளிகள் தங்கவைக்கப்பட்டிருந்தனர். நான் உள்ளே நுழைந்தபோது அந்த கட்டிடத்தினுள்ளிருந்து ஒரு சகிக்க இ...

red