Skip to main content

வில்லியம் டிண்டேல்



“என் வேதத்தின் மகத்துவங்களை அவர்களுக்கு எழுதிக்கொடுத்தேன்; அவைகளை அந்நியகாரியமாக எண்ணினார்கள்.” – ஓசியா 8:12

இன்று நம்முடைய இல்லங்களில் இரண்டு மூன்று மொழிபெயர்ப்புகள் பல வண்ண அட்டைகளோடு அழகழகான வேதாகமங்களாக நம்முடைய வீட்டின் அலமாரிகளை அலங்கரிக்கின்றன. ஆனால் முதன்முதலாக இந்த வேதாகமம் நம்முடைய கரங்களில் கிடைக்க எத்தனை பரிசுத்தவான்கள் கசையடிகள், நிந்தனைகள், பரிகாச சொற்கள், அவமானங்கள் பட்டார்கள். சிலர் இதற்காக இரத்த சாட்சியாக மரிக்கவும் ஒப்புக்கொடுத்தார்கள். அதில் மூல பாஷையான எபிரேயு, கிரேக்கு மொழிகளில் இருந்து முதன் முதலில் ஆங்கிலத்தில் வேதாகமத்தை மொழிபெயர்த்தவர் வில்லியம் டிண்டேல் என்னும் பரிசுத்தவான்.

1494ல் இங்கிலாந்தில் பிறந்த இவர் ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் பட்டம் பெற்று அதன்பின் தனக்குப் பிடித்த இறையியலை படிக்க ஆரம்பித்தார். அப்பொழுது கிரேக்கம், எபிரேயம், லத்தீன் போன்ற மொழிகளில் மட்டுமே வேதாகமம் இருந்தது. ரோம கத்தோலிக்க ஆதிக்கத்தினால் போதகர்கள் கையில் மட்டுமே வேதாகமம் இருந்தது. சாதாரண மக்கள் வேதாகமத்தை வைத்திருக்கவோ வாசிக்கவோ முடியாது. வில்லியம் டிண்டேல்-க்கு எல்லாரும் வேதத்தை வாசிக்க வேண்டும் என்ற ஆசை உண்டாகியது. ஏற்கெனவே 8 பாஷைகள் தெரிந்த அவர் கிரேக்க மொழியையும் கற்றார். எப்படியாவது புதிய ஏற்பாட்டை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க வேண்டும் என்று கி.பி. 1523 ல் லண்டன் பட்டணத்திற்கு சென்றார். அங்கும் யாரும் இவரை ஏற்றுக்கொள்ளவில்லை. பின் ஜெர்மனி சென்று மார்டின் லூதருடன் தங்கியிருந்து ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். இங்கு ஒரு வருடத்தில் எபிரேய மொழியை பயின்று 1525 ல் ஜெர்மனியில் தன்னுடைய ஆங்கில மொழிபெயர்ப்பை வெளியிட்டு அச்சிடப்பட்ட ஆங்கில வேதாகமத்தை இங்கிலாந்திற்குள் கள்ளத்தனமாக கொண்டுவந்தார். ஆனால் ஆங்கில வேதாகமம் வைத்திருப்பது தெரிந்ததும் வேதாகமங்கள் பறிக்கப்பட்டு எரிக்கப்பட்டன. இவரை கைது செய்ய அரசனால் கட்டளை பிறப்பிக்கப்பட்டபோது ஐந்து வருடம் தலைமறைவானார். பின் தன் நண்பனால் காட்டிக்கொடுக்கப்பட்டு 500 நாட்கள் சிறைச்சாலையில் பல சித்ரவதைகளை அனுபவித்து, குரல்வளை நெரிக்கப்பட்டு, ஒரு கம்பத்தில் கட்டி வைத்து தீயிட்டு கொளுத்தப்பட்டார். அவர் மரிக்கும்போது “ஆண்டவரே இங்கிலாந்து மன்னனின் கண்களைத் திறந்தருளும்” என்பதுதான் அவருடைய கடைசி வார்த்தைகள். அதேபோல் 1838 ல் அதே எட்டாம் ஹென்றியால் ஆங்கில வேதாகமம் அரசாங்கத்தின் மூலமே வெளியிடப்பட்டது. அதன்பிறகுதான் ஒவ்வொரு பாஷையிலும் வேதாகமம் பல பாடுகள் பிரச்சனைகளுடே வெளியிடப்பட்டது.

நண்பரே! வேதாகமத்தை வீட்டில் வாங்கி அடுக்கி வைப்பதாலோ அழகு பார்ப்பதாலோ ஆசீர்வாதத்தை பெற முடியாது. எத்தனையோ அடைக்கப்பட்ட நாடுகளில் வேதாகமத்தை வைக்க சுதந்திரமில்லை. ஆண்டவர் நமக்கு கொடுத்துள்ள இந்த கிருபையின் நாட்களில் வேதத்தை இரவும் பகலும் பிரியமாய் தியானித்து மிகுந்த சமாதானத்தைப் பெற்றுக் கொள்வோம்.
- Mrs. ஜெபக்கனி ஸ்டீபன்


Comments

  1. How to Play Blackjack and Win - DRMCD
    Blackjack is the 서귀포 출장마사지 easiest, and most rewarding way 이천 출장안마 to 동두천 출장안마 play blackjack. As a blackjack 강릉 출장샵 player, you're playing against 김제 출장안마 the dealer, or in the same room.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

Thank God everyday for what we have!

🍁A repost from someone worth reflecting on: The beginning of 2020 has revealed enough for deep reflection: That giant Australia is not at all invincible from fire… That mighty China could be shaken by enemies that are too small to be seen… That what we view as small is a fully destructive Volcano… That what we see as a basketball star could fall into a deadly crash… Things are, indeed… never too big nor too small… never too high nor too low… never too powerful nor too faint… never too wealthy nor too broke… never too famous nor too ordinary… Whatever our condition is, … we are all equal… the rain falls on the just and the unjust... the sun rises on the evil and the good... we are all important… we are all gifts… our current status does not define us at all… what we have or possess is never a mighty protective armor… So, in life… don’t be rude… don’t be greedy… don’t be selfish… don’t be ill-mannered… don’t be crabby… don’t be wicked… don't be unemp

valentine's day gospel message / Christian message / quotes

ஞாயிறு பள்ளி உவமை கதை

*†* *💒ஞாயிறு பள்ளி உவமை கதை* ___________________________ பாட்டி படுத்திருந்த திண்ணையின் ஓரத்தில் விளையாடிக்கொண்டிருந்தாள் பேத்தி. திடீரென வானில் மேகம் சூழ்ந்து, மழை கொட்டியது. பாட்டி, பேத்தியிடம், அடியே, எவ்வளவு தண்ணீர் வீணாய்ப் போகுது. அண்டாவை முற் றத்தில் கொண்டு வந்து வச்சு மழை தண்ணீரை நிரப்புடி என் ராசாத்தி..." என்றாள். போ... பாட்டி" என மறுத்தாள் பேத்தி. அடியே, அடுக்களையில் இருக்கிற பாத்திரத்தை அப்படியே கொண்டு வந்து முற்றத்தில் வைக்கிறது பெரிய வேலையா? போய் அண்டாவைக் கொண்டு வந்து அப்படியே வை..." என உத்தரவிட்டாள் பாட்டி. வெறுப்பாய் ஓடி, பாட்டி சொன்னதைச் செய்துவிட்டுத் திரும்பி னாள் பேத்தி. அரை மணி நேரம் மழை கொட்டியது! இந்நேரம் அண்டா நிரம்பி இருக்கும் என ஆனந்தமடைந்த பாட்டி, திண்ணையை விட்டு முற்றத்துக்கு எழுந்து போனாள். பகீர் என்று ஆனது பாட்டிக்கு. அண்டாவில் ஒரு சொட்டு தண்ணீர்கூட இல்லை. ‘அப்படியே கொண்டு வந்து முற்றத்தில் வை’ என்று பாட்டி சொன்னதை, வேத வாக்காக எடுத்துக் கொண்டு, கழுவிக் கவிழ்த்து வைத்திருந்த அண்டாவை கவிழ்த்த வண்ணமே மழையில் வைத்து விட்டாள்