Skip to main content

ஆச்சி மசாலா உரிமையாளரை உங்களில் எத்தனை பேருக்கு தெரியும் ?..

ஆச்சி மசாலா உரிமையாளரை உங்களில் எத்தனை பேருக்கு தெரியும் ?..

'ஆச்சி மசாலா ' ஏ. டி. பத்மசிங் ஐசக் தூத்துக்குடி மாவட்டத்தில் சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்தவர்.

12 வயதிலேயே தனது தந்தையை இழந்தவர்.

பள்ளி ஓய்வு நாட்களிலே ஒரு பெட்டிக்கடையை நடத்தி அதன் மூலம் தனது கல்லூரி படிப்பை முடித்தவர்.

அவரது அம்மா 80 ரூபாய்க்கு பழைய சைக்கிள் ஒன்றை அவர்க்கு வாங்கி கொடுத்தார்.

அந்த சைக்கிளில் அவர் தினமும் 32கி. மீ. பயணம் செய்து கல்லூரிக்கு படிக்க சென்றார்.

படிப்பை முடித்தவுடன், அடுத்து வேலை தேடி சூட்கேசில் இரண்டு சட்டை துணிகளுடன் சென்னைக்கு வந்தார். Godrej நிறுவனத்தில் Salesman ஆக சேர்ந்தார்.

அப்பொழுதுதான் கிராமங்களில் ஹேர் டை விற்கும்படி இவருக்கு கொடுக்கப்பட்ட பெரிய சவால். முதலில் கடைக்காரர்கள் வாங்க ஆர்வம் காட்டவில்லை.

தனது புதிய யுக்தியுடன் காங்கேயம் மாட்டு சந்தைக்கு சென்று அங்குள்ள வயதான மாடுகள் சிலவற்றின் வாலுக்கு ஹேர் டை அடித்து காட்டியதும் மாடுகள் கூடுதல் விலைக்கு விற்றுப் போனது.

மாடுகளின் உரிமையாளர்கள் வியந்து போய் தங்கள் நரைத்த மீசைகளுக்கு அந்த 'டை' யை போட்டி போட்டு வாங்கியிருக்கிறார்கள்.

அடுத்து சொந்த தொழில் தொடங்கும் ஆசையில் பார்த்துக்கொண்டிருந்த வேலையை விட்டு விட்டு ஏகப்பட்ட கஷ்டங்களை அனுபவித்திருக்கிறார்.

கையில் பணம் இல்லை. கடன் கேட்ட இடங்களில் கேலி கிண்டலோடு அவமானப்படுத்தப் பட்டிருக்கிறார்.

இறுதியில் மனைவியின் தங்க தாலியை எட்டாயிரம் ரூபாய்க்கு அடகு வைத்து மசாலா பொருட்களை தயாரிக்கத்  தொடங்கினார். அது தான் ஆச்சி மசாலாவின் முதல் முதலீடு. தரமான மசாலா பொருட்களை எளிய மக்களும் வாங்கி உபயோகிக்க வேண்டும் என்ற வகையில் முதலில் 1 ருபாய், 2 ரூபாய்க்கு ஆச்சி மசாலாவை தயார் செய்தார்.

தொடக்க காலத்தில் கடைகளுக்கு அவர் ஆச்சி மசாலாவை விற்பனைக்காக கொண்டு சென்ற போது புது மசாலா விற்காது என்று கடைக்காரர்கள் தள்ளி விட்டிருக்கிறார்கள்.

அவரே அதை கடைத்தெருவிற்கு கொண்டு சென்று கூவி கூவி விற்றி ருக்கிறார்.

இதுவே இந்தியாவில் ஆச்சி மசாலா பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட கடைகளுக்கு கொண்டு சேர்க்க மிகப்பெரிய பாலமாக அமைந்தது.

இவர் மசாலா தயாரிக்க கடனுக்கு வாங்கி வைத்திருந்த மிளகு சீரகம் மூட்டைகளை சிலர் இரவோடு இரவாக திருடிச் சென்று மார்க்கெட்டில் விற்று விட்டார்கள். இது மிகப் பெரிய பொருள் இழப்பை தந்திருக்கிறது.

2004 ஆம் ஆண்டு பெரு வெள்ளத்தில் இவரது முழு தொழிற்சாலையும் கழுத்தளவு தண்ணீரில் மூழ்கிப் போனது. இதில் இருந்தும் மீண்டு வந்தவர்.

இவர் வாழ்க்கையில் சந்தித்த தோல்விகள், அவமானங்கள், ஏமாற்றங்கள் ஏராளம்.

அத்தனையும் அவர் தாங்கிக்கொண்டு கடுமையாக உழைத்து உருவாக்கியதுதான் இந்திய மக்கள் அனைவரும் கொண்டாடும் ஆச்சி மசாலா.

மக்களுக்கு எப்படிப்பட்ட பொருட்களின் தேவை இருக்கிறது என்ற தேடலுடன் மார்க்கெட் போகும் போது ஒவ்வொரு குப்பை தொட்டியையும் பார்ப்பார். அதில் கிடக்கும் கவர்களை கொண்டு தனது பொருட்களை எந்த அளவிற்கு மக்கள் உபயோகித்து இருக்கிறார்கள். எப்படிப்பட்ட பொருட்களின் தேவை இருக்கிறது என்பதையும் தெரிந்து கொண்டார்.

இதுவே ஏறக்குறைய 250 வகைகளில் ஆச்சி நிறுவனம் உணவுப் பொருட்களை தயாரிக்க வழி வகுத்துள்ளது. 55 நாடுகளுக்கும் ஏற்றுமதியாகிறது.

 பாரம்பரிய கலாச்சார உணவுகள் மறக்கப்பட்ட இந்தக்காலத்தில் 'உணவே மருந்து' என்று எடுத்துரைத்து உணவு பொருட்களில், பழைய காலத்தில் அம்மியில் வைத்து அரைக்கும் போது  இருந்த மணம், சுவை, மருத்துவ குணம் மாறாமல் தனது மசாலாவை தயாரித்து மக்களிடையே கொண்டு போய் சேர்த்தார்.

பல கோடி மக்கள் 'உணவே மருந்து' என்று அதனை வாங்கி பயன் படுத்துகிறார்கள் இந்தியாவிலேயே ஆச்சி மசாலா நம்பர்-1 நிறுவனமாக உருவாக இதுவே அடித் தளமாக மாறியது.

பத்தாயிரம் குடும்பங்களுக்கு வேலை வாய்ப்புகளையும் வாழ்வாதாரத்தையும் உருவாக்கியுள்ளார்.

 தன் நிறுவனத்தில் 65%  பெண்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி உள்ளார். விதவைகள், குடும்பத்தாரால்  கைவிடப்பட்டவர்கள், வேலை தேடி ஊரை விட்டு இங்கு வந்தவர்கள் அடங்குவர்.

மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை வாய்ப்புகளை கொடுத்து எல்லோர் வாழ்விலும் நம்பிக்கை ஒளியை  ஏற்றியவர். பெண்கள் முன்னேற்றத்திற்கு இவர் நிறுவனத்தின் மூலம் 2% செலவிடப்படுகிறது.

 புதிய பாதை,  புதிய யுத்தி, விடாமுயற்சி,  எளிமையான அணுகுமுறை, எந்த ஒரு காரியத்தை செய்தாலும் மக்கள் நலன் கருதி,  சமுதாயக் கண்ணோட்டத்தோடு  செய்தால் வெற்றி நிச்சயம் என்பது இவரது தாரக மந்திரம்.

ஆலமரமாக வளர்ந்து நிற்கும் ஆச்சி உணவுப் பொருள் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் ஏ. டி. பத்மசிங் ஐசக் பல்லாயிரம் ஏழை எளிய மக்களுக்கு வாழ்வாதாரமாக திகழ்கிறார்.

Comments

Popular posts from this blog

Thank God everyday for what we have!

🍁A repost from someone worth reflecting on: The beginning of 2020 has revealed enough for deep reflection: That giant Australia is not at all invincible from fire… That mighty China could be shaken by enemies that are too small to be seen… That what we view as small is a fully destructive Volcano… That what we see as a basketball star could fall into a deadly crash… Things are, indeed… never too big nor too small… never too high nor too low… never too powerful nor too faint… never too wealthy nor too broke… never too famous nor too ordinary… Whatever our condition is, … we are all equal… the rain falls on the just and the unjust... the sun rises on the evil and the good... we are all important… we are all gifts… our current status does not define us at all… what we have or possess is never a mighty protective armor… So, in life… don’t be rude… don’t be greedy… don’t be selfish… don’t be ill-mannered… don’t be crabby… don’t be wicked… don't be unemp

valentine's day gospel message / Christian message / quotes

சார்லஸ் தியோஃபிலஸ் எவால்ட் ரேனியஸ்

*நெல்லை அப்போஸ்தலனுக்கு இன்று பிறந்த நாள்* (Nov-04) *சார்லஸ் தியோஃபிலஸ் எவால்ட் ரேனியஸ்* (1790-1838) ============================= 🔥 பிறந்த நாடு - இப்பொழுது உலக வரைபடத்தில் இல்லாத பிரஷ்யா. 🔥 தாய் மொழி - ஜெர்மனி. 🔥வானுயர ஊசி கோபுரத்தைக் கட்டிய "நாயகன்"😇 🔥மென்மையான தன் வெள்ளைக் கால்களால் தேரிக்காடு, கல்ரோடு எங்கும் இரவு பகலாக நடந்து  371 சபைகளைத் தோற்றுவித்த "தங்கம்"😇 🔥திருநெல்வேலி முழுவதும் 200 பள்ளிகளை நிறுவி பாளையங்கோட்டையை Oxford City ஆக மாற்றின "மேதை"😇 🔥திருநெல்வேலி மாவட்டம் முழுதும் நற்செய்தி பரப்பிய "கடவுளின் தொண்டன்"😇 🔥இந்தியாவிற்கு இளம் வயதில் வந்து, வாழ்நாள் முழுவதும் இங்கேயே தங்கி ஊழியம் செய்து, தன் தாயைப் பாா்க்க ஒரு முறை கூட தாயகம் திரும்பாத "தியாகி"!! 🔥 1814 இல் சென்னை வந்து அங்கு ஆறு ஆண்டுகள் பணியாற்றியவர். 🔥 1820 -1838 வரை 18 ஆண்டுகள் திருநெல்வேலி வாழ்க்கை. 🔥 நெல்லைச் சீமையில் இவர் நிறுவிய திருச்சபைகள் 371. 🔥 நிறுவிய பள்ளிகள் 107. 🔥 திருநெல்வேலி மண்ணிலே விதைக்கப்பட்டவர். இவரது கல்