Skip to main content

Posts

நம்மை தூக்கி சுமப்பவரே தெய்வம்.

*பிள்ளையாரைப் போட்டுடைத்த பெரியார் கைது..*  பெரியார் பிள்ளையாரைப் போட்டுடைத்தார் என்று குற்றம் சாட்டப்பட்டு, கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்...... நீதிபதி, கைது செய்த காவலரிடம்.... இவர் என்ன குற்றம் செய்தார்? காவலர்/,... இவர் பிள்ளையாரைப் போட்டுடைத்தார்.... நீதிபதி.... பெரியாரிடம்/.. பிள்ளையாரைப் போட்டுடைத்தீர்களா? பெரியார்... ஆமாம், போட்டுடைத்தேன்.. நீதிபதி... ஏன் அப்படி செய்தீர்கள்? பெரியார்... கடைவீதிக்குப்போனேன், அங்கு பிள்ளையார் சிலையை விலைக்கு வாங்கினேன்... யாருக்கும் இடையூறு இல்லாமல், தெருஒரமாகப் போட்டுடைத்தேன்... நீதிபதி... ஒரு மதத்தவர் வணங்கும் கடவுளைப் போட்டுடைப்பது அவர்களது மனதை புன்படுத்தாதா? அது தவறல்லவா? பெரியார்.... நான் பிள்ளையார் சிலையை வாங்கும்போது, பலர் அதேபோல வாங்கினார்கள்..அவர்கள் எல்லாம் என்ன செய்தார்கள் என்று கேளுங்கள் என்றார்... நீதிபதி... காவலரிடம்... மற்றவர்கள் என்ன செய்தார்கள் என்று கேட்டார்.. காவலர்.. அவர்களும் போட்டுடைத்தார்கள் என்று கூறினார்... நீதிபதி... அவர்களை ஏன் கைது செய்யவில்லை என்று கேட்டார்....

என் மனதில் பட்ட வியக்க வைக்கும் விசுவாச வார்த்தை

*என் மனதில் பட்ட வியக்க வைக்கும்  விசுவாச வார்த்தை*🔥 "சில ஆலயத்தில்" பத்து ஆத்துமாக்கள் உள்ள சபை பாஸ்டருக்கு கூட "நான் ஒரு பாஸ்டர் என் மனைவி பாஸ்டரம்மா" என்ற பெருமை பிடித்துள்ளது மற்றும் "நான் தீர்க்கதரிசி" "நான் அப்போஸ்தலர்" "நான் ரெவரண்ட்" என்று போட்டிபோட்டுக்கொண்டு பட்டங்களை சூட்டிக்கொள்ளும் தேவ ஊழியர்கள் மத்தியில்..... 👉சுவிசேஷத்தை நான் பிரசங்கித்துவந்தும், மேன்மைபாராட்ட எனக்கு இடமில்லை; அது என்மேல் விழுந்த கடமையாயிருக்கிறது; சுவிசேஷத்தை நான் பிரசங்கியாதிருந்தால், எனக்கு ஐயோ. I கொரிந்தியர் 9:16👈 என்று சொல்லியுள்ள ஊழியர் பவுலின் பயத்துடன் கூடிய விசுவாச வார்த்தை நமக்கு வியப்பாக இருக்கிறதே!

நோவாவா? லோத்துவா?

🔥📖💥 *சத்தியத்தின்*       *வெளிச்சம்* 💥📖🔥 👉 *கவனித்தீர்களா!?* 🤔 "நோவா ", "லோத்து " இருவரும் நீதிமான்கள் தான். ஆனால்,  👀 *தேவ பக்தி, வைராக்கியத்தில் வித்தியாசம் உள்ளது*. 👀 👉 *நோவா* பூர்வ உலகத்தையும் தப்ப விடாமல் *நீதியைப் பிரசங்கித்தார்*. 📖 2 பேதுரு 2:5 தனி ஒரு மனிதனாக, தன்னைச் சுற்றியுள்ள அத்தனைபேரும் தன்னை வெறுத்தாலும், பகைத்தாலும், எதிர்த்தாலும்  அக்கிரமச் செயல்களையும், அதனால் மூளும் தேவ கோபத்தையும் *"உள்ளதை உள்ளதென்று "* *(நீதியை)* *நோவா பிரசங்கித்தார்*.* 👉 *கவனிக்க* 👁👁 : தன் குடும்பத்தை ஆதாயப்படுத்திக் கொண்டார். 👉 *லோத்து* அக்கிரம கிரியைகளைக் கண்டு,  கேட்டு நீதியுள்ள தன்னுடைய இருதயத்தில் வாதிக்கப்பட்டார் லோத்து. 📖 8 அக்கிரமங்களைக் கண்டும், கேட்டும் *மனதிற்குள் மாத்திரம் நொந்துக்கொண்டு புழுங்கியுள்ளார் லோத்து*. 💁‍♂  தன் குடும்பத்தைக் கூட லோத்துவால் ஆதாயப்படுத்த முடியவில்லை. 🤷‍♂😢 🔥 *வேத வேளிச்சமாகிய நீதியை நாம் எல்லோருமே அறிந்திருக்கிறோம்.* *அறிந்த நீதியை இருதயத்தோடு வைத்திருக்கிறோமா!?* *இது தான் நீ...

எதை தெரிந்தெடுப்பீர்கள்?

எதை தெரிந்தெடுப்பீர்கள்? திருடன் திருடவும் கொல்லவும் அழிக்கவும் வருகிறானேயன்றி வேறொன்றுக்கும் வரான். நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தேன். - யோவான் 10:10. . ஒரு பணக்கார வாலிபன், மரித்து, பரலோக வாசலண்டை போனபோது, அங்கு பரிசுத்த பேதுரு நின்று அந்த வாலிபனிடம், ‘நாங்கள் இங்கு ஒரு புதிய தீர்மானம் கொண்டு வந்திருக்கிறோம். பரலோகத்திற்கு செல்வதா அல்லது நரகம் செல்வதா என்று நீங்களே தீர்மானிக்கலாம்’  என்றார். அப்போது அந்த வாலிபன், 'ஓ! இவ்வளவுதானே, நான் பரலோகத்திற்கு செல்லவே விரும்புகிறேன்' என்றுக் கூறினான். அப்போது பேதுரு, அப்படி தீர்மானிப்பது அவ்வளவு எளிதல்ல, அதற்கு முன்பு நரகத்தில் ஒரு நாளும், பரலோகத்தில் ஒரு நாளும் செசவழிக்க வேண்டும். அதன்பின், நீ முடிவெடுக்கலாம் என்றுக் கூறினார். முதலில், அவன் நரகத்திற்கு அனுப்பப்பட்டான். அங்கு போனவுடன்,  அருமையான ஒரு தோடடம் இருந்தது. அங்கு அவனுடைய பழைய நண்பர்களும், அவனோடு  கூட வேலை செய்தவர்களும், அவனை வரவேற்று, பழைய கதைகளைப் பேசி, சந்தோஷமாய் நேரத்தைக் கழித்தார்கள். சாத்தானையும் அவன் சந்தித்தான். சாத்தானும் ...

அன்பு நம்மிடத்தில் பூரணப்படுகிறது

ஒரு வீட்டில் இரண்டு பூனைகள் நண்பர்களாயிருந்தன….ஆனால் அவைகள் இரண்டும் ஒற்றுமையில்லாது அடிக்கடி சண்டை போட்டுக் கொண்டிருந்தன. ஒரு நாள் அப்பூனைகளுக்கு ஒரு அப்பம் கிடைத்தது. அவை இரண்டும் அதை சாப்பிட முனைந்த போது அதை சரிசமமாக பிரிப்பதில் அவைகளுக்குள் பிரச்சனை ஏற்பட்டது. அதனால் பூனைகள் இரண்டும் யாரிடமாவது சென்று அப்பத்தை சரிசமமாக பங்கிட்டு தரச்சொல்லலாம் என எண்ணி வீட்டிற்கு வெளியே வந்தன. அப்போது ஒரு குரங்கு அங்கு வந்தது. குரங்கிடம் அப்பத்தை கொடுத்து  அதைச் சமமாக பிரித்துத் தரசம்படி கேட்டன. குரங்கும் மிக மகிழ்வுடன் அதற்கு சம்மதித்து ஒரு தராசு கொண்டு வந்து, அப்பத்தை இரண்டாக பித்து தராசின் ஒவ்வொரு தட்டிலும் ஒவ்வொரு அப்பத்துண்டை வைத்து நிறுத்தது. அப்போது ஒரு அப்பத் துண்டு சிறிது பெரிதாக இருந்ததினால் அந்தத் துண்டு இருந்த தட்டு சற்று கீழே பதிந்தது. உடனே அந்தக் குரங்கு அந்த அப்பத் துண்டை எடுத்து ஒரு கடி கடித்து சாப்பிட்டு விட்டு மீதியை தட்டில் போட்டது . இப்போது மற்றத் தட்டு கீழே தாழ்ந்தது. அப்போதும் அந்த தட்டில் இருந்த அப்பத்துண்டை எடுத்து சிறிது  கடித்து விட்டு மீண்டூம் போட்டது. ...

யார் பெரியவன்!

*“யார் பெரியவன்!”.* ஒருநாள் நமது கையில் உள்ள ஐந்து விரல்களுக்கும் வாக்கு வாதம் உண்டாயிற்று. ஐந்து விரல்களும் தங்களைக் குறித்து மேன்மை பாராட்ட தொடங்கிற்று.  ஒவ்வொரு விரலும் நான் தான் பெரியவன் என்று வாக்குவாதம் செய்ய ஆரம்பித்தது. *கட்டைவிரல்..* அப்போது கட்டைவிரல் தன்னுடைய மேன்மையை இப்படிச் சொல்லிற்று.  நான் தான் பெரியவன் ஏனென்றால் என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யமுடியாது. உதாரணமாக ஒரு பொருளை கையால் தூக்கி வேண்டுமென்றால் நீங்கள் நான்கு பேரும் அதை தூக்கினாலும் கட்டைவிரலாகிய நான் அதை  தாங்கி பிடிக்காவிட்டால் உங்களால் ஒன்றும்  தூக்கவே முடியாது. ஆகவே என்னுடைய பெலன் மிகவும் அதிகம் உருவத்திலும் நான் குள்ளமாக இருந்தாலும் பருமனாய் இருநக்கிறேன். நீங்கள் என் பக்கத்தில் கூட இருக்க தகுதியில்லை.  அதை நீங்கள் உள்ளங்கையின்  அமைப்பிலேயே இருக்கிறேன். ஆகையால் நான் எனக்கும் உங்கள் நால்வருக்கும் மத்தியிலே இடைவெளி அதிகமாக இருப்பதை பார்க்கலாம் ஆகவே நீங்கள் என் பக்கத்தில் கூட இருக்க தகுதி இல்லை என்று கட்டைவிரல் ஜம்பம்அடித்து வாதாடிற்று. *ஆள்காட்டி விரல்...* ஆள...

பெண்குழந்தையை பெற்ற ஒவ்வொருவரும் அவரவர் மனபிரதிபலிப்பாக போற்றும் பதிவு

ஒரு தந்தை தனது மகளின் திருமண விழாவில் ஆற்றிய உரையை ஃபேஸ்புக் பகிர்வில் படிக்க நேர்ந்தது. மிகவும் உருக்கமான, யதார்த்தமான, இயல்பான அந்த பதிவு இதோ: எனது மனதின் மகிழ்ச்சியான இந்த தருணத்தில் பங்கு பெற்ற உங்கள் அனைவருக்கும் நன்றி.! இந்தநாள் வாழ்வில் மறக்க முடியாத நாளாக மாறிவிட்டது. காரணம் ... எங்கள் மகளை திருமணம் செய்து கொடுத்துவிட்டோம். இனி, இளைப்பாற விரும்புகிறோம். அதை அனுபவிக்க தயாராகிவிட்டோம். ஆனால், அதற்கு நீங்கள் அவளை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள வேண்டும். நான் எதிர்பார்ப்பதை விட நீங்கள் அவளை மகிழ்ச்சியுடன் வைத்துக் கொள்வீர்கள் என நான் நம்புகிறேன். அவள் என் வீட்டில் துள்ளித் திரிந்ததை விட உங்கள் வீட்டில் மகிழ்ச்சி துள்ளளோடு இருப்பாள் என நம்புகிறேன். இருந்தாலும், எல்லா சராசரி தந்தையைப் போலவும் நான் இதை திரும்பத் திரும்ப சொல்கிறேன் "தயவு செய்து அவள் மகிழ்ச்சிக்கு குறை ஏதும் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள்" அவள் எப்போதுமே எனக்கு பாரமாக இருந்ததில்லை. இனியும் ஒருபோதும் பாரமாக கருத மாட்டேன். ஏனெனில், என் சுவாசம் இயல்பாக இருப்பதற்கும், என் இதழ்களில் புன்னகை பூப்பதற்...